பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947-ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால்[1] நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட இந்தியாவின் மாகாணங்கள் பிரித்தானிய முடிக்கு கீழ்பட்ட அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட முடியாட்சிகள் என்பவற்றைக் கொண்டிருந்தது. 1876-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது இந்தியப் பேரரசு என அழைக்கப்பட்டு அப்பெயரிலேயே கடவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.
ஆளும் முறை 1858-ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விக்டோரியாவின் ஆட்சியின் போது பிரித்தானிய முடிக்கு மாற்றப்பட்டதோடு தொடங்கியது. (1876-ஆம் ஆண்டு விக்டோரியா தன்னை இந்தியாவின் பேரரசியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.) இவ்வாட்சி 1947-ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை வரை நீடித்தது.
மேலும் இது இந்தியா என்ற பெயரில் உறுப்பு நாடுகளுள் ஒன்றாக 1900, 1920, 1928, 1932 மற்றும் 1936 ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக்ஸிலும் 1945-இல் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராகவும் இணைந்தது.
20 ஆம் நூற்றாண்டின் போது பிரித்தானிய இந்தியா ஒரு ஆளுநர் அல்லது துணைநிலை ஆளுநர் மூலம் நிர்வகிக்கப்படும் எட்டு மாகாணங்களைக் கொண்டிருந்தது. 1907 ஆண்டு கணக்கின்படி மக்கள் தொகை அடிப்படையில் பின்வரும் மாகாணங்களை கொண்டிருந்தது. அவைகள்:
(British) பிரித்தானியாவின் இந்திய மாகாணங்கள் (தற்போதைய பகுதிகள்)
வங்கப் பிரிவினைக்கு பின் (1905–1911) அசாம் மற்றும் கிழக்கு வங்க பகுதிகளை இணைத்து ஒரு துணை ஆளுநரின் ஆட்சியின் கீழ் ஒரு புதிய மாகாணம் உருவாக்கப்பட்டது. 1912ல் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகள் இணைந்து, பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா பகுதிகள் கொண்ட வங்காள மாகாணமாக மாறியது.
மாயோ பிரபு - 1869 – 1872 = முதன்முதலாக இந்திய நடுவண் அரசுக்கும், மாகாண அரசுகளுக்கிடையே நிதியை பகிர்ந்தளிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். முதன்முதலாக 1872-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்திய சுதேச சமஸ்தான மன்னர்களின் வாரிசுகள் படிக்க அஜ்மீரில்மாயோ கல்லூரி நிறுவனப்பட்டது.[3] இவர் அந்தமான் சிற்றறைச் சிறையை பார்க்கச் சென்ற போது சேர் அலி என்ற கைதியால் கொலை செய்யப்பட்டார்.
நார்த்புரூக் பிரபு - 1872 – 1876 = பதிவுத் திருமணம் மற்றும் ஆரிய சமாஜம் நடத்தும் திருமண முறைகளை அறிமுகப்படுத்தினார். 1872-இல் பன்னாட்டு திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் சாதிக் கலப்புத் திருமணங்களை சட்டப்படி அனுமதித்தார்.
லிட்டன் பிரபு - 1876 – 1880 = 1878-இல் பிரதேச மொழி பத்திரிக்கைச் சட்டம் மற்றும் இந்தியர்கள் உத்தரவின்றி படைக்கலன்களை ஏந்த அனுமதி மறுக்கும் படைக்கலச் சட்டம் இயற்றப்பட்டது. அலிகாரில் முகமதிய-ஆங்கில கீழை நாட்டு கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டது. இதுவே இன்றைய அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆனது. பஞ்சாத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கத் தவறினார். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு வயது 21 வயதிலிருந்து 19-ஆக குறைத்தார். விக்டோரியா மகாராணி இந்தியாவிற்கும் பேர்ரரசியாக அறிவிக்கப்பட்டார்.
ரிப்பன் பிரபு - 1880 – 1884 = இந்திய நிர்வாகத்தில் இந்திய மக்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர். பஞ்சாப் பல்கலைக் கழகம் (1884) மற்றும் அலகாபாத் பல்கலைக் கழகம் (1887) நிறுவினார். தொழிற்சாலைச் சட்டம் (1881) கொண்டு வந்தார். வட்டார மொழிகள் பத்திரிக்கை சட்டம் நீக்கப்படுதல் (1881). இந்தியாவில் முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1881-இல் நடைபெற்றது. கி.பி.1882-இல் வில்லியம் வில்சன் ஹன்டர்சன்[4] மூலம் கல்விக்குழு அமைத்தார். 1829 இராஜாராம் மோகன் ராயுடன் இணைந்து உடன் கட்டை ஏறும் முறையை ஒழிக்க பாடுபட்டார். கி.பி.1883-ல் ஆங்கிலேயக் குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரணை செய்யும் இல்பர்ட் மசோதாவைக் கொண்டு வந்தார். கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை வலுப்படுத்தும் வகையில் ஊராட்சி, நகராட்சி, மாவட்ட ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்தினார்.
வெல்லிங்டன் பிரபு - 1931 – 1936 = காந்திக்கும், அம்பேத்காருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. சமூக ரீதியாக இந்திய சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு துவங்கியது.
இந்தியத் துணைகண்டத்தில் சுரண்டிய வளங்களின் மதிப்பு
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவேஸ் நகரத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில், உலகளாவிய சமத்துவமின்மைக்கான பின்னணி குறித்த அறிக்கையை ஆக்ஸ்பாம் பன்னாட்டு அமைப்பு 20 சனவரி 2025 அன்று அறிக்கை வெளியிட்டது. அதில் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் காலனி பகுதியாக இருந்த இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து 1765 மற்றும் 1900ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிரித்தானியவுக்கு 64.82 டிரில்லியன்அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இந்திய வளங்களைச் சுரண்டிச் சென்றனர் என்றும், அதில் 33.8 டிரில்லியன்அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வளங்கள் 10% பிரித்தானியப் பணக்காரர்கள் பிரித்துக்கொண்டனர் என்று ஆக்ஸ்பேம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[6][7][8][9]
.
மேலும் 1750-ஆம் ஆண்டில் உலகளாவிய தொழில்துறை உற்பத்தியில் இந்தியத் துணைக்கண்டத்தின் பங்களிப்பு ஏறத்தாழ 25% ஆக இருந்தது என்றும், இதுவே 1900ஆம் ஆண்டில் 2% ஆக குறைந்துவிட்டது என்றும் ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவிக்கிறது.