அலகாபாத் வானூர்தி நிலையம்
அலகாபாத் வானூர்தி நிலையம் (Allahabad Airport) (ஐஏடிஏ குறியீடு:ஐஎக்ஸ்டீ,ஐசிஏஓ குறியீடு:விஇஏபி) இந்திய நாட்டில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அலகாபாத் நகரிலிருந்து 12 கிலோ மீற்றர்கள் தொலைவில அமைந்துள்ளது. இது ஒரு உள்நாட்டு முனையம் ஆகும். கான்பூர் வானூர்தி நிலையம், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்றவை அமைந்துள்ளது. இங்கிருந்து ஏர் இந்தியா இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு நேரடியாக விமான சேவையை வழங்குகிறது. இந்த விமான நிலையம் 1919 [1] ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. பன்னாட்டு வானூர்தி நிலையமாக 1946 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் இங்கிருந்து இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனுக்கு 1932 [2][3] ஆம் ஆண்டிலேயே விமானம் இயக்கத் துவங்கப்பட்டது. சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்றவை 200 கிலோ மீற்றர்கள் மற்றும் 120 கிலோ மீற்றர்களிலேயே அமைந்துள்ளன. இந்த விமான நிலையத்தில் தற்போது கருவிகள் இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia