ஆதம்பூர் வானூர்தி நிலையம்
ஆதம்பூர் வானூர்தி நிலையம் (Adampur Airport) (நிலையக் குறியீடு|AIP & VIAX) உள்நாட்டு பயணிகள் வானூர்தி நிலையமாகவும், இந்திய வான்படையின் தளமாகவும் செயல்படுகிறது. இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் நகரத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும்; ஜலந்தர் நகரத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும்; ஹோஷியார்பூர் நகரத்திலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ஜலந்தர்-ஹோசியார்பூர் நகரங்களுக்கு இடையே அமைந்த ஆதம்பூர் வானூர்தி நிலையம் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 3 செல்கிறது. வரலாறுஇந்திய வான்படை தளமாக1950ஆம் ஆண்டில் ஆதம்பூர் வான்படை நிலையம் நிறுவப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போர், 1965, 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர், 1999 கார்கில் போர் மற்றும் 2025 சிந்தூர் நடவடிக்கையின் போது ஆதம்பூர் வான்படை தளம் முக்கியப் பங்கு வகித்தது. மேலும் இது உள்நாட்டுஉள்நாட்டு பயணிகள் வானூர்தி நிலையமாகவும் பயன்பாட்டிற்கு வந்தது. கட்டமைப்புஇந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் ரூபாய் 18 கோடி செலவில் ஆதம்பூர் வான்படை தளத்தின்[4][5][6][7] ஒரு பகுதியில் உள்நாட்டுப் பயணிகளுக்கான முனையம் நிறுவியது.[8]ஆதம்பூர் வானூர்தி நிலையத்திலிருந்து 1 மே 2018 முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பயணிகள் வானூர்திகளை இயக்கத் தொடங்கியது. ஆதம்பூர் வானூர்தி நிலையத்தில் இரண்டாவது புதிய பயணிகள் முனையத்தை 42 ஏக்கர் பரப்பில் நிறுவ அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆதம்பூர் வான்படை தளம்![]() ![]() இந்திய வான்படைக்கு சொந்தமான ஆதம்பூர் வான்படை தளம், இந்தியாவின் இரண்டாவது பெரிய வான்படை தளமாகும். இது இந்திய-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆதம்பூரில் வான்படை தளத்தில் இந்திய வான்படையின் 47 மற்றும் 223வது ஸ்வாட்ரான் போர் விமானங்கள் உள்ளது. இவ்வான்படை தளத்தில் மிக்-29, மிக்-21 மற்றும் மிராஜ் 2000 வகைப் போர் விமானங்களைக் கொண்டுள்ளது. உள்நாட்டு போக்குவரத்து2019ஆம் ஆண்டு இறுதி வரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஆதம்பூர் வானூர்தி நிலையத்திலிருந்து நாள்தோறும் மற்றும் வாரந்திர அடிப்படையில் தில்லி, மும்பை மற்றும் ஜெய்ப்பூருக்கு பயணிகள் வானூர்திகளை இயக்கியது. பின்னர் சூலை 2023 முதல் வட்டார இணைப்புத் திட்டம் - உடான் திட்டத்தின் கீழ் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் காசியாபாத், பெங்களூர், நாந்தெட், கொல்கத்தா மற்றும் கோவா நகரங்களுக்கு வானூர்திகளை இயக்கியது. 31 மார்ச் 2024 முதல் மற்றும் ஸ்டார் ஏர் நிறுவனம் பெங்களூர், காசியாபாத் மற்றும் நாந்தேட் நகரங்களுக்கு பயணியர் வானூர்திகளை இயக்கியது.[9] இந்தியப் பிரதமரின் வருகைஆதம்பூர் வான்படை தளத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 13 மே 2025 அன்று வருகை புரிந்து வான்படை வீரர்களிடையே 2025 பாகிஸ்தான் தீவிரவாதத்த்திற்கு எதிரான சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து உரையாற்றினார்.[10][11][12] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia