செகதல்பூர் வானூர்தி நிலையம்
செகதல்பூர் வானூர்தி நிலையம் (Jagdalpur Airport) (ஐஏடிஏ: JGB, ஐசிஏஓ: VEJR) என்பது உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது சத்தீசுகர் மாநிலத்தில் ஜெகதல்பூரில் அமைந்துள்ளது. இந்திய வானூர்தி நிலையங்கள் நிலைய ஆணையம் (ஏஏஐ) ஜூலை 2013இல் விமானநிலைய சாத்தியக்கூறு குறித்து முன் ஆய்வை நடத்தியது. இதன் பின்னர் விமான காட்சி விதிகள் (விஎஃப்ஆர்) நிபந்தனைகளின் கீழ் விமானங்களின் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்தது.[4] மத்திய அரசாங்கத்தின் உதான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டது. ஒரு முனையக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா 2017 ஜனவரியில் நடைபெற்றது.[5][6] ஏடிஆர் -72 வகை விமானங்களின் செயல்பாட்டை அனுமதிக்கும் வகையில் விமானநிலையம் 2019 ஆம் ஆண்டில் 3 சி வகையாக மேம்படுத்தப்பட்டது.[7] 21 செப்டம்பர் 2020 அன்று அலையன்ஸ் ஏர் ஏடிஆர் -72 விமானங்களைப் பயன்படுத்தி ஐதராபாத் மற்றும் ராய்ப்பூருக்கு விமானச் சேவையினைத் தொடங்கியது. ஜகதல்பூர் விமான நிலையத்தின் பெயரானது செப்டம்பர் 21, 2020 அன்று மா தாந்தேசுவரி வானூர்தி நிலையமாக மாற்றப்பட்டது. தற்போதைய விமான நிலைய இயக்குநர் ஸ்ரீ கே.கே. பாமிக் ஆவார். பசுதர் மாவட்டத்தின் உல்நார் கிராமத்தில் ஜகதல்பூருக்கு[8] புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் முன்வைத்தது. இந்த விமான நிலையம் 250 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான ஓடுபாதையானது 3 கி.மீ நீளமும் 200 மீட்டர் அகலமும் கொண்டதாக அமையும். விமான இது ஒரு நவீன விமான நிலையக் முனைய கட்டடத்தைக் கொண்டிருக்கும். தேவைப்படும் நிலத்தில் சுமார் 92% (229 ஹெக்டேர்) அரசுக்குச் சொந்தமானது என்பதால், நிலம் கையகப்படுத்தும் செயல்முறை விரைவாக நடைபெற்று விரைவான விமான நிலைய வளர்ச்சி நேரத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்![]()
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia