காப்பிட் மாவட்டம்
காப்பிட் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Kapit; ஆங்கிலம்: Kapit District; சீனம்: 加帛区) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; காப்பிட் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தை ராஜாங் ஆறு ஊடுருவிச் செல்கிறது.[2][3] இந்த மாவட்டத்தில் இபான் சமூகத்தவர் ராஜாங் ஆற்று பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மாவட்டத்தின் தலைநகரமான காப்பிட் நகரத்தில், 1800-ஆம் ஆண்டுகளில் இருந்து நீள வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பொது![]() காப்பிட் மாவட்டம் போர்னியோவின் உட்பகுதியில் இருப்பதால், முன்னர் காலத்தில் ராஜாங் ஆற்று வழியாகத்தான் அங்கு செல்ல முடியும். இப்போது புது தார் சாலைகளை அமைத்து இருக்கிறார்கள்.[4] இந்த மாவட்டம் சிபு நகரில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ளது. விரைவுப் படகு மூலம் செல்லலாம். 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பிடிக்கும். இலகுரக விமானம் மூலமாகவும் செல்லலாம். கார் மற்றும் பேருந்தில் செல்ல சுமார் 1 மணி 30 நிமிடங்கள் பிடிக்கும். வரலாறுவெள்ளை இராஜா சார்லஸ் புரூக் மன்னரின் ஆட்சியின் போது, 1880-ஆம் ஆண்டில், காப்பிட் பகுதியில் ’காப்பிட் கோட்டை’ (Fort Kapit) கட்டப்பட்டது. இந்தக் கோட்டை கட்டப் படுவதற்கு முன்னர் இபான் மக்கள் ஆற்றின் வழியாகச் சென்று ஒராங் உலு (Orang Ulu) மக்களைத் தாக்கி வந்தனர். கோட்டை கட்டப்பட்டதும் தாக்குதல் நிறுத்தப்பட்டது.[5] கோட்டையின் பாதுகாப்பினால், கோட்டையைச் சுற்றி இருந்த பகுதிகளில், 1880-இல் சீனர்கள் (Hokkien Chinese) படிப்படியாகக் குடியேறினர். 1924-ஆம் ஆண்டில், காப்பிட் கோட்டையில், இபான் மற்றும் ஒராங் உலு மக்களுக்கு இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது. இதனால் இரு பழங்குடி மக்களுக்கும் இடையிலான பல நூறு ஆண்டுகள் பகைமை நிரந்தரமான முடிவிற்கு வந்தது.[6] ராணியார் சில்வியா கோட்டை![]() 1925-ஆம் ஆண்டில், காப்பிட் கோட்டை, ராஜா சார்லசு வைனர் புரூக்கின் மனைவி ராணி சில்வியா புரூக்கின் (Rani Sylvia Brooke) நினைவாக, ’சில்வியா கோட்டை’ (Fort Sylvia) என மறுபெயரிடப்பட்டது.[5] இந்தக் கோட்டை 1887, 1934, 1961 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளையும் தாங்கி நின்றது.[6] 28 ஜனவரி 1934-இல், காப்பிட் வரலாற்றிலேயே மிகக் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. ராஜாங் ஆற்றின் நீர் மட்டம் 162 அடி (49 மீ) வரை உயர்ந்தது.[5] ஜப்பானியர் ஆக்கிரமிப்பு1941-ஆம் ஆண்டில், ஜப்பானியர் ஆக்கிரமிப்பின் போது (Japanese Occupation), காப்பிட்டில் 37 கடைவீடுகள் கொண்ட இரண்டு வரிசைகள் இருந்தன. போரின் போது நேச நாடுகளின் குண்டுவீச்சினால் காப்பிட் நகரம் முற்றிலும் அழிந்தது. 1973 ஏப்ரல் 2-ஆம் தேதி, சரவாக் மாநிலத்தில் ஒரு பிரிவாகக் காப்பிட் மேம்படுத்தப்பட்டது. ஒரு காலத்தில் சில்வியா கோட்டையில், காப்பிட் மாவட்ட அலுவலகம்; காப்பிட் நீதிமன்றம் இருந்தன. 1973-க்குப் பிறகு, அது காப்பிட் பிரிவின் அலுவலகமாக மாற்றப் பட்டது.[7] சான்றுகள்
இவற்றையும் பார்க்கபுற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia