பெலுரு மாவட்டம்
![]() பெலுரு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Beluru; ஆங்கிலம்: Beluru District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; மிரி பிரிவில்; ஒரு மாவட்டமாகும்.[1] பெலுரு மாவட்டம் மிரி நகரத்தில் இருந்து 80 கி.மீ. அல்லது ஒன்றரை மணிநேர பயணத்தில் பாக்குன் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.[2] வரலாறுஇப்போதைய பெலுரு மாவட்டம் முன்பு சிறிய மாவட்டமாக இருந்த போது மருடி மாவட்டத்தின் (Marudi District Office); நிர்வாகத்தின் கீழ் உள்ளது. பெலுரு மாவட்டம் 1970-களில் செயல்படத் தொடங்கியது. அப்போதைய நிர்வாகம் உலு சுங்கை நாடளுமன்றப் பராமரிப்பில் இருந்தது. இதன் துணை மாவட்ட அலுவலகம் 1976-இல் நிறுவப்பட்டது. அதன் முதல் நிர்வாக அதிகாரி சோனிசு காட்பெரி பாண்டிக் (Joanis Godfery Pandik).[3] பெலுரு மாவட்டம் 01 ஆகஸ்ட் 2016-இல் முழு மாவட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. அக்டோபர் 15, 2016-இல் முழு மாவட்டமாக செயல்படத் தொடங்கியது. மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia