பாவு மாவட்டம்
![]() பாவு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Bau; ஆங்கிலம்: Bau District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் கூச்சிங் பிரிவில்; உள்ள ஒரு மாவட்டம்.[1][2] 1840-ஆம் ஆண்டுகளில் பாவு மாவட்டத்தில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போர்னியோ நிறுவனத்தினால் (The Borneo Company) தங்கச் சுரங்கத் தொழில்கள் கையகப் படுத்தப்பட்டன. 1921-இல், சுரங்கத் தொழில்களில் வருமானம் குறைவானது. அதன் தொடர்ச்சியாகச் சுரங்கங்கள் மூடப்பட்டன.[3] 1970-களின் பிற்பகுதியில் உலக தங்கத்தின் விலை உயர்ந்த போது சுரங்கங்கள் மீண்டும் திறக்கப் பட்டன. பின்னர் ஆசிய நிதி நெருக்கடி தொடங்கியபோது 1996-இல், அந்தச் சுரங்கங்கள் மீண்டும் மூடப்பட்டன.[4] 2014-ஆம் ஆண்டு நிலவரப்படி, சுரங்க உரிமைகள் நார்த் போர்னியோ கோல்ட் நிறுவனத்திடம் (North Borneo Gold) இருந்தது.[5] வரலாறு1837-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி, செக்ராங் இபான்கள் (Skrang Ibans); பிரதாக் மலை (Bratak Peak) சிகரத்தின் உச்சியில் இருந்த சகோய் - பிரதாக் பிடாயூ (Jagoi-Bratak Bidayuh) குடியேற்றப் பகுதியில் வாழ்ந்த பிடாயூ மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். 2,000 சகோய் - பிரதாக் பிடாயூ ஆண்களைக் கொன்றார்கள். 1,000 பெண்களைச் சிறைபிடித்தார்கள். சகோய் - பிரதாக் பிடாயூ சமூகத்தின் தலைவரான பாங்லிமா குலோவ் மற்றும் அவரின் சீடர்கள் சிலர் படுகொலையில் இருந்து தப்பினர். சகோய் - பிரதாக் தினம்ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி, 1837 படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்களின் சந்ததியினர் தங்கள் முன்னோர்களின் நினைவாக பாவு பகுதியில் உள்ள பிரதாக் சிகரத்தின் உச்சியில் சகோய் - பிரதாக் தினத்தை (Jagoi-Bratak Day) கொண்டாடுகிறார்கள். அந்த நாளைக் குறிக்கும் வகையில், 1988 மே 1-ஆம் தேதி ஒரு நினைவுக் கல் அமைக்கப்பட்டது.[6][7] 1841-ஆம் ஆண்டில் சரவாக்கின் புதிய வெள்ளை ராஜா ஜேம்சு புரூக், சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் சிலரை மீட்டு எடுத்தார். மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia