கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவில்
குறுங்காலீசுவரர் கோவில் (ஆங்கிலம்: Kurungaleeswarar Temple) என்பது இந்தியாவின் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்துக் கோவிலாகும். இக்கோவில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இடைக்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த பெரிய குளத்தை உள்ளடக்கிய கோயில். சொற்பிறப்பியல்அம்புகளால் ஆன வேலியில் இராமனால் அனுப்பப்பட்ட குதிரையை, இலவனும் குசனும் பிடித்தததால் இப்பகுதி கோயம்பேடு என்று பெயர் பெற்றது. கோ என்ற சொல்லுக்கு குதிரை என்றும், அம்பு என்றால் அம்பு என்றும், பேடு என்றால் வேலி என்றும் பொருள். கோவில் அமைப்புகுறுங்காலீசுவரர் கோவில் தமிழ்நாட்டின் சென்னை நகரத்தில் உள்ள கோயம்பேடு அருகே அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். இந்த கோவில் கோயம்பேடு கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மூன்று நிலைகளுடன் இராஜகோபுரம். கோவிலின் மூலவர் குறுங்காலீசுவரர் அல்லது குசலவபுரீசுவரர் என்றும், அம்மன் தர்மசம்வர்த்தினி அல்லது அறம் வளர்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.[2] தல விருட்சம் (கோயிலின் தெய்வீக மரம்) ஒரு பலா மரம் . அதிகார நந்தி, காலபைரவர், வீரபத்திரர், விநாயகர், பிரம்மன், சுப்பிரமணியர் ஆகிய தெய்வ சன்னதிகள் உள்ளன. மூலவர் விமானத்தின் கருவறையின் பின்புற கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருவது சிறப்பு. வழக்கமாக இங்கு இலிங்கோத்பவர் சிலை அமைப்பது வழக்கம். மகாவிஷ்ணு மற்றும் துர்க்கை கருவறையின் மேற்குபுற கோட்டங்களில் உள்ளனர். திருச்சுற்றில் நடராசர் மற்றும் நாயன்மார்களுக்கான சன்னதிகள் உள்ளன. நவக்கிரக மண்டபத்தில் சூரியன் எழுகுதிரை பூட்டிய தேரில் மனைவியருடன் காட்சி தருகிறார். கோவில் முன் 16 கால் மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் இராமாயணக் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் தூண் ஒன்றில் சரபேசுவரரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இவருக்கு ஞாயிறு தோறும் மாலை இராகு கால பூசை நடைபெறுவது கோவிலின் மற்றொரு சிறப்பு.[3] கல்வெட்டுகள்இக்கோவிலில் இந்திய தொல்பொருள் அளவீட்டுத் துறையினர் 14 கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளனர். இவை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். பொ.ஊ. 12 நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டுகள், ஜெயம்கொண்ட சோழமண்டலம், மாங்காடு நாட்டில் இப்பகுதி இடம்பெற்றிருந்ததை பதிவு செய்துள்ளன. கோயம்பேடு கிராமசபை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்த செய்திகள் குறித்தும் இக்கல்வெட்டுகலில் இடம்பெற்றுள்ளன.[4] தொன்மம் மற்றும் வரலாறுஇராமரைப் பிரிந்த பிறகு சீதை கனத்த மனதுடன் இங்கு வந்த போது, இந்தக் கோவிலை வால்மீகி உருவாக்கியதாக நம்பப்படுகிறது. சிவனை வழிபட்டு வந்த சீதை இலவன் மற்றும் குசனைப் பெற்றெடுத்தாள். வால்மீகியின் ஆதரவால் இலவன், குசன் ஆகிய இருவரும் நன்கு வளர்ந்து வருகிறார்கள். ஒரு நாள் அயோத்தியில் இராமர் அஸ்வமேத வேள்வி நடத்தினார், வேள்வி முடிந்ததும் இராமர் அனுப்பிய குதிரை ஓடிவந்து, தற்போது கோயம்பேடு என்று அழைக்கப்படும் இந்த இடத்தை அடைந்தது. கோயம்பேடு முன்னாளில் கோசை என்று அழைக்கப்பட்டது. குதிரையை கண்டுபிடித்து வேள்வி தொடங்கிய இடத்திற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் இராமரின் மைந்தர்களான இல்வனும் குசனும் குதிரையைப் பிடித்து வைத்து, இராமரின் படையை உறுதியாக எதிர்த்தனர். இராமர் படை தோற்றதால், இறுதியாக இலக்குஷ்மணனும் வந்து போரிட்டான். அவனும் லவ குசர்களிடம் தோற்றான். இறுதியாக, இராமர் போரில் களம் காண வந்தார். இலவ குசர்களும் இராமனை எதிர்க்கத் துணிந்தனர்.. நல்வாய்ப்பாக வால்மீகி முனிவர் இலவ குசர்கள் தங்கள் சொந்த தந்தையை எதிர்த்துப் போராடப் போவதை குழந்தைகளுக்கு உணர்த்தினார். இதற்குப் பிறகு இராமர் குடும்பம் ஒன்றுபட்டது, அன்றிலிருந்து, இராமரின் குடும்பம் மீண்டும் ஒன்றிணைவதற்கு சிவபெருமான் காரணமாக இருந்ததால், இந்த கோவில் குடும்ப ஒற்றுமைக்கான கோவில் என்று பெயர் பெற்றது. இக்கோயில் பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தது.[4] மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia