ஜெரமி பெந்தாம்
ஜெரமி பெந்தாம் அல்லது ஜெரமி பெந்தம் (Jeremy Bentham: 15 பிப்ரவரி 1748 – 6 ஜூன் 1832) ஓர் பிரித்தானியத் தத்துவவியலாளர்; அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்,[1][2] சமூக சீர்திருத்தவாதி. இவருடைய பயன் கருதுக் கோட்பாடு மிகவும் புகழ்பெற்றதாகும்.[3] இவர் மேலும் 'அரசியல் தந்திரங்கள் பற்றிய கட்டுரை', 'பன்னாட்டுச் சட்டத்தின் கொள்கைகள்', 'அரசியலமைப்புத் தொகுப்பு', 'இங்கிலாந்தின் தேவாலயம்' ஆகிய புகழ்பெற்ற நூல்களையும் எழுதியுள்ளார். விலங்குரிமைவிலங்குரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களில் தனது காலகட்டத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஜெரமி பெந்தாம். ஒரு விலங்கின் நலத்தேவைகளைக் கருத்தில் கொள்ளும்போதெல்லாம் அங்கு தார்மீக ரீதியில் பொருத்தமாக அமைவது அவ்விலங்கின் பகுத்தறியும் திறன் அல்ல எனறும் மாறாக அது அவ்விலங்கின் துன்பத்தை அனுபவிக்கும் திறனேயாகும் என்று பெந்தாம் வலியுறுத்துகிறார்.[4]:309n தனது ஆன் இன்ட்ரொடக்ஷன் டு தி பிரின்சிபல்ஸ் ஆஃப் மாரல்ஸ் அண்டு லெஜிஸ்லேஷன் என்ற படைப்பில் பெந்தாம் இவ்வாறு கூறுகிறார்:[4]:309n
இவற்றையும் காண்கமேற்கோளும் குறிப்புகளும்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜெரமி பெந்தாம்
|
Portal di Ensiklopedia Dunia