யோங் தெக் லீ
யோங் தெக் லீ (ஆங்கிலம்; Yong Teck Lee; மலாய்: Datuk Seri Panglima Yong Teck Lee) (பிறப்பு: 3 அக்டோபர் 1958) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார்.
பொதுமேலும் இவர் சனவரி 1994 முதல், சபா மக்கள் கூட்டணி (GRS) மற்றும் பெரிக்காத்தான் நேசனல் (PN) ஆகியவற்றின் ஓர் அங்கமான சபா முற்போக்கு கட்சியின் (SAPP) 1-ஆவது தலைவர் மற்றும் நிறுவனர் ஆவார். அத்துடன், சபா மக்கள் கூட்டணி (GRS); மற்றும் பெரிக்காத்தான் நேசனல் (PN) ஆகிய இரு கூட்டணிகளின் துணைத் தலைவராகவும் உள்ளார்.[1] அரசியல் வாழ்க்கையோங் தெக் லீ, 28 மே 1996-இல், சபாவின் முதலமைச்சரானார். சபா மாநிலத்தில் பாரிசான் நேசனல் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு ஆண்டு சபா முதலமைச்சர் பதவி சுழற்சியில் பணியாற்றினார்.[2] அவர் அதற்கு முன்பு துணை முதல்வராகப் பணியாற்றினார்.[3] 1994-இல் அவர் ஐக்கிய சபா கட்சியில் இருந்து பதவி துறப்பு செய்தார். ஐக்கிய சபா கட்சியின் தலைமைத்துவத்தின் மீதான அதிருப்தியைக் காரணம் காட்டி, சபா முற்போக்கு கட்சியை நிறுவினார். இருப்பினும், புதிய சபா முற்போக்கு கட்சி, ஐக்கிய சபா கட்சி (PBS) தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணியில் உறுப்பினரானது.[4] சர்ச்சைகள்மலேசியத் தேர்தல் குற்றச் சட்டம் 1954-இன் கீழ், யோங் தெக் லீ மீது சுமத்தப்பட்ட ஊழல் தொடர்பான குற்றத்தைத் தொடர்ந்து; அவர் செப்டம்பர் 2002 முதல், லிக்காஸ் சட்டமன்ற உறுப்பினர் பதவி; மற்றும் காயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி; ஆகிய இரு பதவிகளில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். எனவே, அவர் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. 18 சூன் 2008 அன்று, அப்துல்லா அகமது படாவியின் தலைமைத்துவத்தின்ன் மீது தன் கட்சி நம்பிக்கை இழந்துவிட்டதாக யோங் தெக் லீ அறிவித்தார். மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் அப்துல்லா அகமது படாவியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் நடவடிக்கையையும் அவர் ஆதரித்தார்.[1] கல்விஅரசியலில் நுழைவதற்கு முன்பு, யோங் தெக் லீ, கோத்தா கினபாலுவில் வழக்கறிஞராகப் பணி புரிந்தார்.[5] இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர் ஆவார். விருதுகள்மலேசிய விருதுகள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia