ராய்சேன் மாவட்டம்
ராய்சேன் மாவட்டம் (Raisen District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ராய்சேன் ஆகும். ராய்சேன் மாவட்டம் போபால் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற சாஞ்சி தொல்லியற்களம் உள்ளது. அமைவிடம்8,395 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு[1] கொண்ட ராய்சேன் மாவட்டத்தின் மேற்கில் செகோர் மாவட்டம், வடக்கில் விதிஷா மாவட்டம், கிழக்கிலும், தென் கிழக்கிலும் சாகர் மாவட்டம், தென் கிழக்கில் நரசிங்பூர் மாவட்டம், தெற்கில் ஹோசங்காபாத் மாவட்டம் எல்லைகளாக கொண்டது. மாவட்ட நிர்வாகம்ராய்சேன் மாவட்டம் ராய்சேன், கோஹர்கஞ்ச், பேகம்கஞ்ச், கைராத்கஞ்ச், சில்வானி, பரேலி, உதய்புரா மற்றும் பாடி என எட்டு வருவாய் வட்டங்களை கொண்டது. மக்கள் தொகையியல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,331,597ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 18.35% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 700,358. ஆண்களும் மற்றும் 631,239. பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 901 பெண்கள் வீதம் உள்ளனர். 8,466 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 157 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 72.98% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.81% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.24% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 207,699 ஆக உள்ளது.[2] மொழிகள்மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள்
போக்குவரத்துதேசிய நெடுஞ்சாலை எண் 12 மற்றும் 86 ராய்சேன் மாவட்டத்தை, மாநிலத் தலைநகர் போபாலுடன் இணைக்கிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia