ஈரோடு மஞ்சள்
குர்க்குமின் உள்ளடக்கம்ஈரோடு மஞ்சளில் அதிக குர்க்குமின் உள்ளது. இது உலக சுகாதார அமைப்பினால்அங்கீகரிக்கப்பட்ட இயற்கையான உணவு வண்ணப் பொருளாகும். ஈரோடு மஞ்சளில் 90 சதவீதம் குர்க்குமின் உள்ளது.[1] இது அதிக மருத்துவ குணம் மற்றும் சுவைக்குப் பெயர் பெற்றது. வகைகள்மஞ்சளின் இரண்டு முக்கிய இரகங்களான சின்ன நாடன் (உள்ளூர் சிறிய ரகம்) மற்றும் பெரும் நாடன் (உள்ளூர் பெரிய ரகம்) உள்ளன. ஈரோட்டில் சின்ன நாடன் அதிகம் விளைகிறது. சிவகிரி, கொடுமுடி, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சத்தியமங்கலம், சென்னம்பட்டி போன்ற பகுதிகளில் இது முக்கியமாக விளைகிறது.[2] மேலும், ஈரோடு பகுதியில் விரல் வகை (விராலி மஞ்சள்) மற்றும் கிழங்கு ரகம் (கிழங்கு மஞ்சள்) ஆகிய மஞ்சள் ரகங்களும் உற்பத்தியாகிறது. உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல்மஞ்சள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஈரோடு மஞ்சளின் மிகப்பெரிய சந்தையாகவும் ஈரோடு உள்ளது. தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்ட போது ஒரு லட்சம் ஏக்கரில் ஈரோட்டில் மட்டும் மஞ்சள் சாகுபடி இருந்தது. ஆனால், தற்போது ஈரோட்டில் மட்டும் 15,000 ஏக்கராக உள்ள நிலையில், மாநிலத்தில் மஞ்சள் உற்பத்தி 50,000 ஏக்கராகக் குறைந்துவிட்டது. 2021 சனவரி மாதத்தில் ஈரோட்டிலிருந்து வங்காளதேசம் போன்ற பல்வேறு நாடுகளுக்கு சுமார் 18,000 டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் ஈரோடு மஞ்சளுக்கு அதிக தேவை உள்ளது.[3] ஈரோட்டில் நான்கு வெவ்வேறு இடங்களில் மஞ்சள் சந்தைகள் செயல்படுகின்றன [4]
புவிசார் குறியீடுஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கம் தமிழக அரசின் மூலம் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தது. எட்டு ஆண்டு செயல்முறைக்குப் பிறகு, இந்திய அரசு 2019 ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது.[5] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia