பழனி பஞ்சாமிர்தம்
![]() பழனி பஞ்சாமிர்தம் (Palani Panchamirtham) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் ஒரு வகைப் பிரசாதம் ஆகும்.பஞ்சாமிருதம் என்பது ஓர் இந்திய இனிப்பும் பிரசாதமும் ஆகும்.[1] இது 2019-20-ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருளாக அறிவிக்கப்பட்டது. இது இந்த தகுதி வழங்கப்பட்ட முதல் கோவில் பிரசாதம் ஆகும்.[2] விளக்கம்பஞ்சாமிர்தம் என்பது ஐந்து பாரம்பரியப் பொருட்களால் ஆன ஓர் இந்திய இனிப்பு வகையாகும். பழனி பஞ்சாமிர்தம் வாழைப்பழம், நெய், தேன், வெல்லம், ஏலக்காய் ஆகிய ஐந்து பொருட்களால் ஆனது. கூடுதலாக, பேரீச்சம்பழங்கள், உலர்திராட்சை, சர்க்கரை போன்ற பிற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.[3][4] மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பழனி மலைகளில் வளர்க்கப்படும் விருப்பாச்சி மலை வாழை என்ற சிறப்பு வகை வாழைப்பழம் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பழங்கள் இதன் தனித்துவமான சுவை, இனிப்புக்காகப் பெயர் பெற்றவை.[5] மலை வாழை இனத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், பஞ்சாமிர்தம் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட காலத்திற்குச் சாப்பிட ஏற்றதாக அமைகிறது. கொங்கு மண்டலத்திலும் விளையும் சிறுமலை மலை வாழை இதே போன்ற பண்புகளைக் கொண்டது. இப்பழம் விருப்பாச்சி இனத்தின் பற்றாக்குறையின் போது பயன்படுத்தப்படுகிறது.[6] காங்கேயம் பகுதியைச் சேர்ந்த கந்த்சாரி சர்க்கரை தயாரிப்பிலும் இந்தப் பழம் பயன்படுத்தப்படுகிறது.[4][7] கொங்கு நாடு பகுதியில் உள்ள பல்வேறு உள்ளூர் கோவில் பிரசாதங்களில் இதே போன்ற செய்முறை பயன்படுத்தப்படுகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பஞ்சாமிர்தம் என்பது அபிசேகப் பிரசாதம்.[8] இந்தக் கோவிலில் ஒரு நாளைக்குச் சராசரியாக 20,000 முதல் 30,000 ஜாடிகள் வரை விற்பனையாகின்றன. மேலும் சிறப்பு நிகழ்வுகளில் ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான ஜாடிகள் விற்பனையாகின்றன.[2] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia