கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் ஒருவர் பிறந்த திகதியை வைத்து அல்லது வரலாற்றுக் குறிப்புகளை வைத்து காலம் முதலில் தரப்படுகின்றது. வாழ்க்கைக்காலம் அடுத்த நூற்றாண்டிலேயே முக்கியம் பெற்றால், அந்த நூற்றாண்டில் சேர்க்கப்படுகின்றார். காலம் தெளிவாகத் தெரியாமல், நூற்றாண்டுக்கு மேலாக ஊகிக்க வேண்டியிருப்பின், ஆகப் பிந்திய கணிப்பிலேயே நபர்கள் சேர்க்கப்படுகின்றார்கள்.
தொல்பழங்காலம்/சங்ககாலம்
0 | 1 - 100 | 100 | 200 | 300 | 400 | 500 | 600 | 700 | 800 | 900 | 1000
1100 | 1200 | 1300 | 1400 | 1500 | 1600 | 1700 | 1800 | 1900 | 2000
தொல்பழங்காலம்/சங்ககாலம்
கிமு 100-1
1 - 100
101 - 200
201 - 300
301 - 400
401 - 500
501 - 600
601 - 700
701 - 800
801 - 900
901 - 1000
1001 - 1100
1101 - 1200
1201 - 1300
1301 - 1400
1401 - 1500
- அகப்பேய்ச் சித்தர் - [8] பரணிடப்பட்டது 2012-08-19 at the வந்தவழி இயந்திரம்
- அம்பலவாண தேசிகர் - பத்து பண்டார சாத்திரங்கள் இயற்றியவர், மூன்று இதர நூல்களையும் இயற்றியவர்[9]
- அருணகிரிநாதர்
- உத்திரநல்லூர் நங்கை- பாய்ச்சலூர்ப் பதிகம்
- கடவுள் மாமுனிவர்
- கயாதர முனிவர்
- காழி கண்ணுடைய வள்ளல் - ஒழிவிலொடுக்கம்
- காளமேகப் புலவர் - யமகண்டம், பிரப்பிரம்ம விளக்கம், சித்திரமடல்
- காளிமுத்தம்மை வருணகுலாதித்தன் மடல் நூலாசிரியை. காளமேகப்புலவர் காலம். ஈடற்ற காமச்சுவை, கவிச்சுவை நூல் என்பர். மடலூர்தலுக்கு இணையற்ற நூல் என்பர் (தமிழ்க் கலைகளஞ்சியம்).
- சட்டைநாத வள்ளல் (1475-1500). சிவஞான வள்ளலின் மாணாக்கர், சதாசிவரூபம் நூல் எழுதியவர். 626 அடிகள் உள்ள அகவற்பா. சீகாழிக்காரர்.
- சிங்கை பரராசசேகரன்
- சிவஞான வள்ளல், கண்ணுடைய வள்ளலின் மாணாக்கர். 20 நூல்கள் கொண்ட ஞானநூல் தொகுதி, கொல்லாமையை வற்புறுத்தி பாடிய பாடல்கள் புகழ் பெற்றவை.
- சிவப்பிரகாசர், மதுரை காலம் ~1488. உரையாசிரியர், இவருக்கு முன் இருந்த 20 ஆசிரியர்களைப் பற்றி அறியத் தருவது.
- சொக்கநாதப் புலவர் - கிள்ளைவிடு தூது
- தத்துவராயர் - 18 சமய நூல்கள்
- திருநெறி விளக்க ஆசிரியர் (சிவாலய முனிவரின் மாணாக்கர்) 1400-1425.
- பகழிக் கூத்தர்
- மணவாள மாமுனிவர்
- வில்லிபுத்தூரார் - பாரதம் இயற்றியவர்
- வீரராகவ முதலியார், முத்தமிழ்க்கவி 15 ஆவது நூற்றாண்டு.. நூல்கள்: திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ண மங்கைமாலை, வரதராசர் பஞ்சரத்தினம், பாலூர்க் கலம்பகம், செய்யூர்ப் பிள்ளைத்தமிழ், தனிப்பாடல்கள்.
1501 - 1600
1601 - 1700
- அகோர முனிவர் - கும்பகோணப் புராணம், திருக்கானிப்பேர்ப் புராணம், தேதாரணிய புராணம் ஆகியன இயற்றியவர்
- அந்தகக்கவி வீரராகவ முதலியார் - திருவாரூர் உலா, சீட்டுக்கவி
- அம்மைச்சி - வருணகுலாதித்தன் மடல் இயற்றியவர்
- அமிர்ந்த கவிராயர் - ஒரு துறைக்கோவை - நாணிக் கண் புதைத்தல்
- அமுத பாணியார் - வள்ளுவர் பிள்ளைத் தமிழ், மணிவாசகர் வரலாறு [11]
- அருளையர் (1659) தாயுமானவரின் சின்னம்மாவின் மகன். கிடைத்துள்ள பாடல்கள் சில.
- ஆதிச்சிற்றம்பலக் கவிராயர் - 23 நூல்கள்
- உமறுப் புலவர் - சீறாப் புராணம்
- கனகவிராயர் - ஷேகு நயினார்கான் - கனகாபிடேக மாலை எழுதியவர்
- காசீம் புலவர் - நபிகள் நாயகத்தை பாட்டுத் தலைவராக கொண்டு திருப்புகழ் இயற்றியவர்.
- குமரகுருபரர்
- சதக்கதுல்லா அப்பா
- சிவப்பிரகாசர் (துறைமங்கலம்) - பல நூல்கள், பிரபுலிங்க லீலை
- சீகன்பால்க் (Ziegenbalg, Bartholomaeus), (1683 - 1719) [9]- தமிழில் விவிலிய மொழிபெயர்ப்பு
- சுப்பிரமணிய தீட்சிதர் - பிரயோக விவேகம் இலக்கண நூல் எழுதியவர்
- நல்லாப்பிள்ளை
- படிக்காசுப் புலவர்
- முத்துராசா கவிராசர் - கைலாயமாலை
- ராபர்ட் தெ நோபிலி - நவீன தமிழ் உரைநடையின் தந்தை, 24 உரைநடை நூல்கள்
- வரத பண்டிதர்
- வராத்துங்க ராம பாண்டியன் - இன்ப விளக்கநூல் - கொக்கோகம் [10][தொடர்பிழந்த இணைப்பு]
- வீரமா முனிவர் (1680 - 1747) - தேம்பாவணி, திருக்குறள் இலத்தீன் பெயர்ப்பும் உரையும்
- வேங்கட நாதர்
- வேலைய சுவாமி 17 ஆம் நூற்றண்டு; துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமியின் தம்பி, நல்லூர்ப்புராணம், வீரசிங்கநாதன் புராணம், மயிலை இரட்டைமணி மாலை, சீகாளத்தி புராணத்தில் கடைசி 12 சுருக்கங்கள்
- வைத்தியநாத நாவலர் இலக்கண விளக்கம், திருவாரூர் பன்மணிமாலை, நல்லூர்ப்புரானம், மயிலம்மைப் பிள்ளைத்தமிழ்
- வைத்தியநாத முனிவர் யாழ்ப்பாண அளவெட்டி ஊரினர். வியாகிரபாத புராணம் (தமிழ்ப் புலவர் சரிதம்) பாடியவர்.
1701 - 1800
- அதிவராக கவி - வடமொழி நூல் காதம்பரி மொழிபெயர்ப்பாளர்
- அந்தோணிக்குட்டி அண்ணாவியார் தூத்துக்குடி, கிறிஸ்தவ இசைக் கீர்த்தனைகள் பாடியுள்ளார்
- அபிராமி பட்டர் - அபிராமி அந்தாதி எழுதியவர்
- அம்பலவாணக் கவிராயர் (சேலம்) - அறப்பளீச்சுர சதகம் பாடியவர் [12]
- அம்பலவாணக் கவிராயர் (மருதூர்) - ஆதித்தபுரி புராணம் பாடியவர் [12]
- அரங்கநாதக் கவிராயர், அஷ்டாவதானம் (~1753) 2477 பாடல்களில் பாரதம் பாடினார்.
- அருணாசலக் கவிராயர் - தமிழிசை
- அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் - திரிபதார்த்த தீபம் எழுதியவர் [12]
- அழகிய நம்பி - குரும்பரம்பரை எழுதியவர் [12]
- அனந்தபாரதி ஐயங்கார் - உத்தர ராமாயணகீர்த்தனை, பாகவத தசமஸ்கந்த நாடகம், யானைமேழகர் நொண்டிச்சிந்து ஆகியன இயற்றியவர்.[12]
- அஷ்டாவதானம் கிருஷ்ணய்யங்கார் எழுதிய சமுத்திர வருணனை
- ஆண்டிப் புலவர் - ஆசிரிய நிகண்டு, உரையறி நன்னூல், நன்னூல் உரை ஆகியன இயற்றியவர்.[12]
- ஆளவந்தார், வீரை. 18 ஆவது நூற்றாண்டு. ஞானவசிட்டத்தை செந்தமிழ் விருத்தத்தில் பாடினார்.
- ஆனந்தரங்கம் பிள்ளை - ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்
- இலக்குமண பாரதியார் பிறப்பு 1768-1859. சிவமலைக் குறவஞ்சி, தமிழ் இசைப்பாடல்கள் பாடியுள்ளார்.
- ஈசுர பாரதி - பல்பொருட் சூடாமணி
- எல்லப்ப நாவலர் - அருணாசல புராணம்
- ஃபிரான்சிஸ் வொயிட் எல்லிஸ் (இந்தியாவில்: 1796-1819) - திருக்குறளுக்கு உரை
- ஃபிலிப் தெ மெல்லோ (1723-1790)- தமிழில் விவிலிய மொழிபெயர்ப்பு
- ஃபெப்ரீசியஸ் Fabricius, Johann Philip (1711-1791) முதல் தமிழ்-ஆங்கில அகராதி தொகுத்தவர்[13]
- கச்சியப்ப முனிவர் - தணிகை புராணம் [11] பரணிடப்பட்டது 2012-02-26 at the வந்தவழி இயந்திரம்
- கந்தசாமிப் புலவர், முத்தாலங்குறிச்சி, திருவனந்தபுரம் நொண்டி நாடகம், கட்டபொம்மு காலத்தவர்.
- கவிராஜ பண்டிதர், திருச்செங்கோட்டுப் புராணம் பாடினார். இவர் தந்தையார் காசித்தல புராணம் பாடினார்.
- காஞ்சிபுரம் இராமசாமியார் (1735 - 1817) - தமிழ் நூல்களை பதிப்பித்தவர்
- கீழையூர்ச் சடகோபதாசர் - அரிசமய தீபம்
- குணங்குடி மஸ்தான் சாகிபு (1788 - 1835) - நிராமயக்கண்ணி உட்பட்ட 14 நூல்கள்
- கூழங்கைத் தம்பிரான்/கனகசபாபதி யோகி [8]
- சவ்வாதுப் புலவர் - முகியித்தீன் பிள்ளைத் தமிழ்
- சிவஞான முனிவர் - சிவஞான பாடியம் உட்பட்ட 28 நூல்கள்; இலக்கணம், இலக்கியம், தருக்கம், சைவ சிந்தாந்தம், மொழிபெயர்ப்பு வல்லமை
- சிவஞான முனிவர் (1785) - சூத்துரவிருத்தி
- சேகாதிநயினார் - திருமணக்காட்சி காப்பியம் இயற்றியவர்
- சேனாதிராச முதலியார், (1750-1840)
- தாயுமானவர் (1705 - 1742)
- திரிகூடராசப்பக் கவிராயர் - திருக்குற்றாலக் குறவஞ்சி
- நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், (1716-1780)
- பனீ அகமது மரைக்காயர் - சின்ன சீறா காப்பியம் இயற்றியவர்
- பாடுவார் முத்தப்பர் (1767 - 1829)
- பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- மயில்வாகனப் புலவர் - யாழ்ப்பாண வைபவ மாலை
- மாரிமுத்துப் பிள்ளை - தமிழிசை
- மிரோன் வின்ஸ்லோ (1789-1864)[14]
- முத்துக்குமாரக் கவிராயர் (1780 - 1851)
- ராமநாத கவிராயர், ஆழ்வார் குறிச்சி. 18 ஆம் நூற்றாண்டு (ஆறை அழகப்ப முதலியார் 1676-1780 காலத்தில் வாழ்ந்தவர்)
- ரேனியஸ் (1789 - 1838)
- வரத பண்டிதர் - [12] பரணிடப்பட்டது 2011-09-16 at the வந்தவழி இயந்திரம்
- வேதநாயக சாஸ்திரி (தஞ்சை வேதநாயகர், 1774 - 1864)
1801 - 1900
- ஆவுடை அக்காள் (பிந்திய கணிப்பு)
- அகுமது லெப்பை அலாம் சாகிபு தாய் மகள் ஏசல் என்னும் நூல்[15]
- அயோத்திதாசர்
- இராகவையங்கார் மு
- இராமசாமி வ என்னும் வ.ரா. (1889-1951)
- இராமசாமிக் கவிராயர் என்னும் பெயரில் 7 பேர் (சேதனப்ப்ட்டு, மதுரை, மிதிலைப்பட்டி, சேற்றூர், உடுமலை, தென்குழந்தாபுரி, மானாமதுரை)
- இராமசாமி செட்டியார் 3 பேர் இருந்தனர் (கானாடு காத்தான், உறையூர், திருவெவ்வுளூர்)
- ஈசுரமூர்த்தியா பிள்ளை மு.பொ, திருநெல்வேலி, "நாட்டுப்பெண் கும்மி", நீதி நெறித் தாலாட்டு"..
- உலகநாத சுவாமி திருவிடைமருதூர், ரிபு கீதை எழுதியவர், 1924 பாடல்கள் மற்றும் பல..
- உலகநாத பிள்ளை, ஆராய்ச்சிப் பெரும்புலவர், இறப்பு 1941.
- ஆனை-ஐயா இருவர், (1800-1832) இசைப்பாடல்கள் இயற்றினர். மகா வைதியநாதையருடைய குரு.
- குணசேகர முதலியார் - அரேபிய இரவுகள் தமிழ் மொழிபெயர்ப்பு - 1825 [16]
- ஆலால சுந்தரம் பிள்ளை (1852-1922), காஞ்சி
- அரங்கப்பிள்ளை கவிராயர் "அரிச்சந்திர விலாசம்" எழுதியவர் 1867ல் வெளியாகியது
- கால்டுவெல் (1814-1891)- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
- போப் ஜி. யு (1820 - 1908) திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு
- அங்கமுத்துப் புலவர் கடிகை ~ 1808, 219 பாடல்கள் கொண்ட நூலாசிரியர்.
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815 - 1876)
- அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர் - நாகயந்தாதி உட்பட பல காவியங்கள்
- ஆறுமுக நாவலர் (1822 - 1879)
- வேதநாயகம் பிள்ளை (1826 - 1889) "மாயூரம் வேதநாயகர்" - முதல் தமிழ் புதினம்: பிரதாப முதலியார் சரித்திரம்
- அசலாம்பிகை அம்மை, பண்டிதை, பிறப்பு 1875, ஆனந்தபோதினி இதழில் எழுதியவர்.
- தியாகராசச் செட்டியார் பூவாளூர் (1826 - 1888)
- கிருஷ்ணபிள்ளை எச். ஏ. (1827 - 1900) இரட்சணிய யாத்திரீகம்
- இராமலிங்க அடிகளார் (1823-1874)
- இராசகோபால பிள்ளை, கோமளபுரம், 1869ல் தொல்காப்பியம் வெளியிட்டார்; பல நூல்கள்.
- மாம்பழக் கவிச்சிங்க நாவலர் (1836 - 1864)
- பொன்னுசாமித் தேவர் முகவை (1837 - 1870)
- கார்ல் கிரால் (Karl Graul) (1838-1879) - திருக்குறள் செர்மானிய மொழிபெயர்ப்பு
- தண்டபாணி சுவாமிகள் (1839 - 1899)
- செந்தில்வேலு முதலியார் சர்க்கரை வீ. (1842 - 1911)
- பாம்பன் சுவாமிகள் (1851 - 1929)
- கலியாணசுந்தர முதலியார் பூவை (1854 - 1918)
- நரசிம்மலு நாயுடு (1854 - 1922)
- குமாரசுவாமிப்புலவர் (1854 - 1922)
- சாமிநாதையர் உ. வே. (1855 - 1942)
- கனகசபை பிள்ளை (1855 - 1906)
- சுந்தரம்பிள்ளை மனோன்மணீயம் பெ. (1855 - 1897)
- சிங்காரவேலு முதலியார் ஆ. - (1855-1932) அபிதான சிந்தாமணி
- சிந்நயச் செட்டியார் (1855 - 1900)
- சொக்கலிங்க ஐயா (1856 - 1931)
- கார்த்திகேய முதலியார் (1857 - 1916)
- சுப்பிரமணிய முதலியார் வெ. ப. (1857 - 1942)
- ஆபிரகாம் பண்டிதர் (1859 - 1930)
- வேலுப்பிள்ளை கல்லடி (1860 - 1944)
- நாராயணசாமி ஐயர் பின்னத்தூர் அ. (1862 - 1914)
- வடிவேலு செட்டியார் கோ (1863 - 1936)
- செல்வக்கேசவராய முதலியார் (1864 - 1921)
- இலக்குமணப் பிள்ளை தி (1864- 1950)
- அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891)
- பூர்ணலிங்கம் பிள்ளை மு. சி. (1866 - 1947)- தமிழ் இலக்கிய வரலாறு
- சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 1922)
- பாண்டித்துரைத் தேவர் (1867 - 1911)
- அரசஞ் சண்முகனார் (1862 - 1915)
- சூரிய நாராயண சாஸ்திரி (1870 - 1903)
- இராகவையங்கார் இரா (1870 - 1946)
- கதிரவேற்பிள்ளை நா (1871 - 1907)
- சுப்பிரமணிய சிவா (1871 - 1925)
- மாணிக்க நாயக்கர் பா. வே. (1871 - 1931)
- சிதம்பரனார் வ. உ. (1872 - 1936)
- ஞானியார் அடிகள் (1873 - 1942)
- பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964)
- செய்குத்தம்பிப் பாவலர் (1874 - 1950)
- தேசிக விநாயகம் பிள்ளை (1876 - 1954)
- நமச்சிவாயம் கா (1876 - 1936)
- மறைமலை அடிகள் (1876-1950)
- வையாபுரிப்பிள்ளை ச (1891-1956)
- வேங்கடசாமி நாட்டார் ந. மு.
- வேங்கடாசலம் பிள்ளை அ
- சேதுப்பிள்ளை ரா. பி
- சுப்பிரமணியப் பிள்ளை கா
- சோமசுந்தர பாரதியார் நாவலர் ச (1879 - 1959)
- சதாசிவ பண்டாரத்தார் தி. வை. (1892-1960) சோழர் வரலாறு முதலிய பல நூலக்ள்.
- தாமோதரம்பிள்ளை சி. வை (1832 - 1901)
- அபிநவ காளமேகம் (1869 - )
- பூண்டி அரங்கநாத முதலியார் (1844 – 1893)
- அ. நாராயண ஐயங்கார் (1861 – 1947)
- செவ்வந்திப்பூ அம்மாள்
1901 - 2000
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ அ. தட்சிணாமூர்த்தி. (1994). தமிழர் நாகரிகமும் பண்பாடும். சென்னை: ஐந்திணைப் பதிப்பகம். பக்கம் 436.
- ↑ இரா. இளங்குமரன். "காக்கை பாடினியம்". 1985. இலக்கண கருவூலம் - பகுதி 1. அண்ணாமலை: அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்கம் 17.
- ↑ பா. இறையரசன். (1997). தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
- ↑ க.ப. அறவாணன். "அவிநயம் - ஓர் அறிமுகமும் ஒரு மானுடவியல் விளக்கமும்". 1985. இலக்கண கருவூலம் - பகுதி 1. அண்ணாமலை: அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்கம் 1.
- ↑ தமிழ்க் கலைக்களஞ்சியம் - தொகு 1
- ↑ வாழ்வியற் களஞ்சியம் - தொ 1, பக் 781
- ↑ சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். தொகுதி 1: பக்கம் 35
- ↑ 8.0 8.1 காலநிதி ச. சிவலிங்கராஜா. (2004). ஈழத்துத் தமிழ் உரைமரபு. கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
- ↑ தமிழ்க் கலைக்களஞ்சியம் - தொ 1
- ↑ தமிழ்க் கலைக்களஞ்சியம்
- ↑ வாழ்வியற் களஞ்சியம் - தொகு 1 - பக் 419
- ↑ 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 தமிழ்க் கலைக்களஞ்சியம் - தொ1
- ↑ http://tamilelibrary.org/teli/tschlr.html
- ↑ Miron, Winslow (1862). A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. Madras: P.R. Hunt.
- ↑ கந்தையா பிள்ளை ந. சி., தமிழ்ப் புலவர் அகராதி, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் சென்னை, 1952, பக்.5
- ↑ Muslim identity, print culture, and the Dravidian factor in Tamil Nadu By J. B. Prashant More
உசாத்துணை நூல்கள்
- வி. செல்வநாயகம், (2000), உரைநடை வரலாறு, கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
- மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.
- குன்றக்குடி பெரியபெருமாள், (1996), தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள், சென்னை
- தமிழ்க் கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 10 தொகுதிகள், 1954-1968
- ஆறு. அழகப்பன் (பதிப்பாசிரியர்). 1985. இலக்கண கருவூலம் - பகுதி 1. அண்ணாமலை: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
வெளி இணைப்புகள்
|