தெலுக் பாங்லிமா காராங்
தெலுக் பாங்லிமா காராங் (மலாய்: Telok Panglima Garang; ஆங்கிலம்: Telok Panglima Garang; சீனம்: 直落邦里玛嘉朗) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா லங்காட் மாவட்டத்தில் (Kuala Langat District) உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து மேற்கே 47 கி.மீ.; கிள்ளான் நகரில் இருந்து தெற்கே 16 கி.மீ.; பந்திங் நகரில் இருந்து வடக்கே 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஒரு தீர்வையற்ற வணிக மண்டலம் (Free Trade Zone) உள்ளது. மலாக்கா நீரிணையை எதிர்கொள்ளும் கேரி தீவு மற்றும் இண்டா தீவு போன்ற கடலோரத் தீவுகளுக்கு அருகில் அமைந்து இருக்கிறது. ஆகவே இந்த நகரும் ஒரு கடலோர நகரமாகவே கருதப் படுகிறது.[1] வரலாறுதெலுக் பாங்லிமா காராங்கின் அசல் பெயர் நிபோங் டெங்கில் (Nibong Dengkil). அதன் புவியியல் நிலை காரணமாக, பழங்குடியின மக்களால் 'வளைகுடா' என்று அழைக்கப்படுகிறது. தெலுக் (Telok) என்றால் மலாய் மொழியில் வளைகுடா என்று பொருள்படும்.[1] முன்பு காலத்தில் அந்த நிபோங் டெங்கில், தெமுவான் (Temuan) பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களின் குடியேற்றமாக இருந்தது. நிபோங் டெங்கில் பகுதி, லங்காட் ஆற்றின் அருகே நல்ல ஓர் உத்திசார்ந்த நிலையில் அமைந்து இருந்ததால், அது அச்சே (Acheh) வணிகர்களின் நிறுத்தப் பகுதியாகவும் மாறியது.[2] பின்னர் அச்சே (Acheh) வணிகர்கள் லங்காட் ஆற்றின் கீழ்ப் பகுதியில் நிரந்தரக் குடியேற்றங்களை உருவாக்கினர். அந்தப் பகுதி பெத்திங் பாக் அச்சே (Beting Pak Acheh) என்று அழைக்கப்பட்டது. தெமுவான் பழங்குடி இனத்தவர் அச்சே வணிகர்களிடம் சரண் அடைந்து, டெங்கில் (Dengkil) பகுதியில் உள்ள புக்கிட் தம்போய் (Bukit Tampoi) எனும் இடத்திற்குப் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[2] போக்குவரத்துதெலுக் பாங்லிமா காராங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இந்த நெடுஞ்சாலை தெலுக் பாங்லிமா காராங் நகரத்தை கிள்ளான், செஞ்சாரோம், பந்திங், சிப்பாங் மற்றும் போர்ட்டிக்சன் நகரங்களுடன் இணைக்கிறது. தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளிதெலுக் பங்லீமா காராங் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 444 மாணவர்கள் பயில்கிறார்கள்; 37 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2020-ஆம் ஆண்டில் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia