கோம்பாக் மாவட்டம்
கோம்பாக் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Gombak; ஆங்கிலம்: Gombak District; சீனம்: 鹅唛县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு தென்கிழக்கில் மலேசியத் தலைநகரமான கோலாலம்பூர்; கிழக்கில் கெந்திங் மலை அமைந்து உள்ளன. கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. தவிர, கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் தான் உள்ளன. கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்: பத்து ஆராங்; குவாங்; ரவாங்; குண்டாங்; கோம்பாக்; செலாயாங்; கெப்போங்; மற்றும் உலு கிள்ளான். 1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு வரை, ரவாங் நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் பண்டார் பாரு செலாயாங், இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது. நிர்வாகப் பகுதிகள்செலாயாங் நகராட்சி மன்றம் (மேற்கு); அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (கிழக்கு); ஆகிய நகராட்சி மன்றங்களால் கோம்பாக் மாவட்டம் நிர்வாகம் செய்யப் படுகிறது. கோம்பாக் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்
கோபாக் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்கோம்பாக் மாவட்டத்தில் 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,868 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia