வேட்டை முறியடிப்பாளர்கள் சங்கம்
வேட்டைத் தடுப்புச் சங்கம் (The Hunt Saboteurs Association [HSA]) என்பது நரி வேட்டையை தடுத்து நிறுத்த நேரடி நடவடிக்கையாக வேட்டை முறியடிப்பைப் பயன்படுத்தும் ஒரு ஐக்கிய இராச்சிய விலங்குரிமை அமைப்பாகும்.[1] 1963-ல் நிறுவப்பட்ட இச்சங்கம் தனது முதல் முறியடிப்புப் பணியினை 1963-ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று சவுத் டேவன் ஃபாக்ஸ்ஹவுண்ட்ஸ் என்ற இடத்தில் அரங்கேற்றியது.[2][3] வரலாறுவேட்டை முறியடிப்பாளர்கள் சங்கம் 1963-ம் ஆண்டு இங்கிலாந்தின் பிரிக்ஸ்ஹாம் நகரில் ஜான் பிரெஸ்டீஜ் என்பவரால் தொடங்கப்பட்டது. டெவோன் மற்றும் சோமர்செட் ஸ்டாக்ஹவுண்டுகளைப் பற்றி அறிக்கையை தயாரிக்க வேண்டி நியமிக்கப்பட்ட பிரஸ்டீஜ் அங்கு ஒருமுறை "வேட்டைக்காரர்கள் ஒரு கிராமத்திற்குள் ஒரு மானை துரத்திச் சென்று அதைக் கொல்வதை கண்டு" மனம் நொந்ததன் விளைவாக இச்சங்கத்தை நிறுவ முற்பட்டார்.[4] ஓராண்டுக்குள் டேவோன், சோமர்செட், ஏவான், பர்மிங்காம், ஹாம்ப்ஷயர், சர்ரே என இங்கிலாந்தில் பரவலாக வேட்டை முறியடிப்பாளர்கள் சங்கத்தின் துணை அமைப்புகள் நிறுவப்பட்டன. இன்று இச்சங்கம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் செயல்பட்டு வருகிறது. விலங்கு விடுதலை முன்னணியின் முன்னோடி அமைப்பான பேண்ட் ஆவ் மெர்சி என்ற விலங்குரிமைக் குழுவின் நிறுவனரான ரோனி லீ இங்கிலாந்தின் லூட்டன் நகரில் வேட்டை முறியடிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு குழுவுடன் தனது விலங்குரிமைச் செயற்பாட்டைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றையும் காண்க
மேற்கோள் தரவுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia