கோலாகங்சார் தொடருந்து நிலையம்
கோலாகங்சார் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kuala Kangsar Railway Station மலாய்: Stesen Keretapi Kuala Kangsar); சீனம்: 瓜拉江沙火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டம், கோலாகங்சார் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். [1] இந்த நிலையம் கோலாகங்சார் நகரத்திற்கும்; மற்றும் கோலாகங்சார் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களுக்கும் சேவை செய்கிறது. ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் (Ipoh-Padang Besar Electrification and Double-Tracking Project) ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டில், தற்போதைய கோலாகங்சார் நிலையம் கோலாகங்சார் நகரத்தில் கட்டப்பட்டது. பொதுசூலை 2008-இல் கம்போங் தாலாங் சிம்பாங் தீகாவில் ஒரு புதிய தொடருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பழைய நிலையம் தொடருந்து அருங்காட்சியகமாகத் தக்கவைக்கப்பட்டது.[2] கோலாகங்சார் நிலையம் மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் உள்ளது. இந்த நிலையம்; கேடிஎம் இடிஎஸ் சேவைகளுக்கு ஒரு நிறுத்தமாகும்.[3] கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவைகேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன. கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது. [4][5] அதே வேளையில், புக்கிட் மெர்தாஜாம், பாடாங் ரெங்காஸ் நிலையங்களை இணைக்கும் 1 பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (KTM Komuter Padang Rengas Line) 10 ஜூலை 2015 அன்று திறக்கப்பட்டது. கோலாகங்சார் நகரம்கோலாகங்சார் நகரம் (Kuala Kangsar), பேராக் மாநிலத்தின் அரச நகரம். இங்கேதான் மலேசியாவின் முதல் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் எச். என். ரிட்லி முதல் ரப்பர் கன்றை நட்டு உலக ரப்பர் ஏற்றுமதியில் மலேசியாவை முதல் நிலைக்கு கொண்டு வந்தார். இந்த நகரத்தின் மக்கள் தொகை 39,331. கோலாகங்சார் நகரத்தில் தான் மலேசியாவில் முதன் முதலில் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. உலக ரப்பர் உற்பத்தி ஏற்றுமதியில் மலேசியாவை முதன்மை படுத்தி முதல் நிலைக்கு கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். அவர் நட்ட அந்த ரப்பர் மரம் வளர்ந்து இன்று வரை கோலாகங்சார் நகரில் காட்சி அளிக்கின்றது. கோலாகங்சார் நகரத்திற்கு வருபவர்கள் அந்த மரத்தைப் பார்க்காமல் செல்வது இல்லை. மலேசியாவின் முதல் ரப்பர் மரம்இந்த ரப்பர் மரம் மலேசியாவின் ஒரு வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது. பார்க்க வருபவர்கள் அதைத் தொட்டுத் தடவிப் பார்ப்பதைத் தடுக்க மரத்தைச் சுற்றிலும் வேலி அமைக்கப் பட்டுள்ளது. மலேசியாவின் இந்த முதல் ரப்பர் மரத்திற்கு இப்போது வயது 100க்கும் மேல் ஆகிறது. கோலாகங்சார் நகரம் கங்சார் ஆற்றுக் கரையோரம் உருவாக்கப் பட்டது. இந்த ஆறு பேராக் ஆற்றுடன் கலக்கிறது. 1877–1887 ஆண்டுகளில் பேராக் மாநிலத்தை ஆட்சி செய்தவர் சுல்தான் யூசுப் சரிபுடின் முசபர் சா. இந்தச் சுல்தான் தான் கோலாகங்சார் அரச நகரத்தை உருவாக்கினார். மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia