இந்த வழித்தடம் மேற்குக் கடற்கரை தொடருந்து பாதை என்றும் அழைக்கப்படுகிறது; ஏனெனில், தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இந்த வழித்தடம் சேவை செய்வதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் ஜூன் 1, 1885-இல் தைப்பிங்-போர்ட் வெல்ட் வழித்தடம் Taiping–Port Weld Line திறப்புடன் உருவாக்கப்பட்டது. 1932-இல் இந்த மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் சிங்கப்பூர்தஞ்சோங் பகார் வரை திறக்கப்பட்டது. அதன் பின்னர் அதன் சேவைகள் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரை முழுவதும் பரவியது. [2]
அடுத்த நிலையில் மலேசியா-தாய்லாந்து எல்லையில் உள்ள பாடாங் பெசார் வரை பரவின. கரையோரத் துறைமுகங்களை ஈயச் சுரங்கப் பகுதிகளுடன் இணைக்கும் கிளை வழித்தடங்களை அமைத்தன் மூலம் மேலும் அதன் செயல்பாடுகள் பெருகின. அதன் பின்னர் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரை மாநிலங்களின் உட்பகுதியில் செல்லும் வழித்தடங்கள் மூலம் பிரதான வழித்தடம் படிப்படியாக இணைக்கப்பட்டது.
[3]
சேவைகள்
மேற்கு கடற்கரை தொடருந்து வழிதடத்தின் சேவைகள்:[4][5][6]
கிம்மாஸ் மற்றும் ஜொகூர் பாரு சென்ட்ரல் இடையிலான சேவை; மேற்குக் கடற்கரை வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். கிம்மாஸ் மற்றும் தும்பாட் இடையிலான சேவை; கிழக்கு கடற்கரை வழித்தடத்தின் ஒரு பகுதியாகும்.
ETS Platinum (முக்கிய நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்படும் அதிவிரைவு சேவை; இலவச அருகலை (Wi-Fi), உணவு; மற்றும் ஒற்றை இருக்கைகளுடன் வணிக வகுப்பிற்கு மேம்படுத்தப்பட்ட 6 பெட்டிகள்)