புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம்
புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Pulau Sebang Tampin Railway Station; மலாய்: Stesen KTMB Pulau Sebang) என்பது மலேசியா, மலாக்கா - நெகிரி செம்பிலான் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும் இதன் வடக்கில் தம்பின்; தெற்கில் புலாவ் செபாங் நகரங்கள் உள்ளன.[1] முன்பு இந்த நிலையம் தம்பின் தொடருந்து நிலையம் (Tampin Railway Station) என்று அழைக்கப்பட்டது. மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை பெரும் வழித்தடத்தின் (KTM West Coast Railway Line), சிரம்பான் துணை வழித்தடத்தில் அமைந்துள்ளது.[2] பொதுநிலவியல் அடிப்படையில் இந்த நிலையம் மலாக்கா மாநிலத்தில் அமைந்துள்ளது. மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் மலாக்கா மாநிலத்திற்கான இரண்டு நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். மலாக்கா மாநிலத்தில் உள்ள மற்றொரு தொடருந்து நிலையம் பத்தாங் மலாக்கா தொடருந்து நிலையம் ஆகும். பொதுவாக இந்த நிலையம் மலாக்கா மாநிலத்திற்கு கூடுதலாகச் சேவை செய்கிறது.[3] சிரம்பான் வழித்தடத்தில், கேடிஎம் இடிஎஸ், கேடிஎம் இண்டர்சிட்டி மற்றும் கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகளால் இந்த நிலையம் சேவை செய்யப்படுகிறது. அத்துடன் சிரம்பான் வழித்தடத்தின் தெற்குப் பகுதியின் கடைசி நிலையமும் இதுவே ஆகும்.[4] பெயர் பிரச்சினைஇந்த நிலையம் மலாக்காவின் அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள புலாவ் செபாங் நகரில் அமைந்துள்ளது. இருப்பினும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் நகருக்கு மிக மிக அருகில் உள்ளது. இந்த நிலையம் புவியியல் ரீதியாக புலாவ் செபாங்கில் அமைந்து இருந்தாலும், "தம்பின் இரயில் நிலையம்" என்று பெயரிடப்பட்டது. அதனால் சர்ச்சைகள் ஏற்பட்டன. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மக்கள் இந்த நிலையத்தை "தம்பின் இரயில் நிலையம்" என்றும்; மலாக்கா மக்கள் "புலாவ் செபாங் இரயில் நிலையம்" என்றும் அழைத்தனர்.[5] தம்பின்/புலாவ் செபாங் அறிவிப்புப் பலகைமலாயா தொடருந்து நிறுவனம் அதன் பங்கிற்கு இந்த நிலையத்தின் பெயர் "புலாவ் செபாங்" நிலையம் அல்ல "தம்பின்" நிலையம் என்று உறுதிப்படுத்தியது. நிலையத்தின் நடைமேடைகளில் "தம்பின்/புலாவ் செபாங்" என்று எழுதப்பட்ட அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. அதன் பிறகும் பெயர்த் தகராறு தொடர்ந்தது. இருப்பினும், ஜனவரி 4, 2013-இல், மலாக்கா மாநில அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், மலாயா தொடருந்து நிறுவனம் இந்த நிலையத்தின் பெயரை புலாவ் செபாங்/தம்பின் நிலையம் என நிரந்தரமாக மாற்றியது. அதன் மூலம் பெயரிடும் சர்ச்சையும் தீர்க்கப்பட்டது. வரலாறு1905-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தின் கட்டுமானம் சிரம்பான் நகரில் இருந்து தம்பின் நகரை அடைந்தபோது இந்த நிலையம் செயல்படத் தொடங்கியது. பின்னர் டிசம்பர் 1, 1905-இல், 34 கி.மீ. (21 மைல்) தம்பின் - மலாக்கா பாதை திறக்கப்பட்டது.[6] ஓர் ஆண்டு கழித்து 1 அக்டோபர் 1906-இல் கிம்மாஸ் பிரதான வழித்தடம் திறக்கப்பட்டது. தம்பின் - மலாக்கா வழித்தடத்தின் தண்டவாளங்கள் பின்னர் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்களால் அகற்றப்பட்டது. சேவைகள்
மேற்சான்றுகள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia