இந்துசுதான் அவாம் மோர்ச்சா 8 மே 2015 அன்று பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜீதன் ராம் மாஞ்சியால் முறையாகத் தொடங்கப்பட்டது. இவர் 2015 பீகார் அரசியல் ஏற்பட்ட நெருக்கடியினைத் தொடர்ந்து இந்துசுதானி அவாம் மோர்ச்சாவை உருவாக்க 18 பேருடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட்டு வெளியேறினார்.[4][5] இந்தக் கட்சி சூன் 2015-இல் இதன் பெயருடன் "மதச்சார்பற்றது" என்று சேர்த்து, இந்துசுதானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்றது) ஆனது.[6][7] சூலை 2015-இல், தேர்தல் ஆணையம் இக்கட்சியினை அரசியல் கட்சியாக அங்கீகரித்தது.[8] கட்சியின் தேர்தல் சின்னம் கடாய் ஆகும்.[9][10][11]
வரலாறு
சூலை 2015-இல், இக்கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து 21 இடங்களில் போட்டியிட்டது. மேலும் சில கூடுதல் உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சி இடங்களில் பீகாரில் போட்டியிட்டனர்.[12] 18 செப்டம்பர் 2015 அன்று, தனது 13 வேட்பாளர்களின் முதல் பட்டியலை மக்தும்பூர் மற்றும் இமாம்கஞ்ச் ஆகிய இடங்களில் மஞ்சியுடன் போட்டியிட்டது.[13][14]
மக்தம்பூரில் மாஞ்சி தோற்ற நிலையில் இமாம்கஞ்சில் மட்டுமே கட்சி வெற்றி பெற்றது.[15]
முந்தைய தேர்தலில், இந்த கூட்டணிக்கு மூன்று சிறிய கூட்டணிகளுடன் பாஜக தலைமையில் செயல்பட்டது. லோக் ஜனசக்தி கட்சி, தி ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி மற்றும் இந்துசுதானி அவாமி மோச்சா ஆகும். ஐக்கிய ஜனதா தளம் மகாகத்பந்தன் எதிர்க்கட்சியின் ஒரு பகுதியாகப் போட்டியிட்டது.[16][17] 2017ஆம் ஆண்டில், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியினை மாற்றியது. இதனால் மகாகத்பந்தன் அரசாங்கம் கலைக்கப்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது.[18] 2018ஆம் ஆண்டில், இந்துசுதானி அவாமி மோச்சா மற்றும் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி கூட்டணியை விட்டு வெளியேறின.[19][20]
ஆகத்து 2020-இல் பிரச்சார கட்டத்தில், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. 2020 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி நான்கு இடங்களை வென்றது. மாஞ்சியின் மகன் சந்தோசு சுமன், நிதிசு குமாரின் அமைச்சரவையில் அமைச்சரானார்.[21]