எசுகேசு வானூர்தி நிறுவனம்
எசுகேசு வானூர்தி நிறுவனம் அல்லது எஸ்கேஎஸ் ஏர்வேஸ் (ஆங்கிலம்: SKS Airways; மலாய்: SKS Airways (KI/SJB) என்பது மலேசியா, சிலாங்கூர், சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்; ஜொகூர் பாரு, செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இரு நிலையங்களில் அலுவலகங்களைக் கொண்டு இயங்கும் ஒரு வானூர்தி நிறுவனம் ஆகும். கிழக்கு மலேசியாவில் உள்ள தீவுகளுக்கான பயணிகள் சேவைத் துறையை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது. அண்மைய காலங்களில் விமானச் சரக்குச் சேவைத் துறையிலும் படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகிறது. பொதுநவம்பர் 2017-இல், எஸ்.கே.எஸ் வானூர்தி நிறுவனம் நிறுவப்பட்டது. 15 ஜூலை 2019-இல், அந்த வானூர்தி நிறுவனம் தனது முதல் DHC 6-300 டுவின் ஓட்டர் (DHC 6-300 Twin Otter) ரக வானூர்தியைப் பெற்றது. அக்டோபர் 2021-இல், எஸ்.கே.எஸ் வானூர்தி நிறுவனத்தை இயக்குவதற்கான சான்றிதழ் பெறப்பட்டது. 25 ஜனவரி 2022-இல், சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையத்தில் இருந்து பங்கோர் தீவுக்கு தனது முதல் வணிக வானூர்திச் சேவையை அறிமுகப் படுத்தியது. 23 டிசம்பர் 2020-இல், தனது இரண்டாவது DHC 6-300 டுவின் ஓட்டர் (DHC 6-300 Twin Otter) ரக வானூர்தியைப் பெற்றது. வானூர்திகள்2021 அக்டோபர் நிலவரப்படி, எசுகேசு நிறுவனம் பின்வரும் வானூர்திகளைக் கொண்டிருந்தது :[3]
இலக்குகள்பிப்ரவரி 2022 புள்ளிவிரங்கள்: எசுகேசு வானூர்தி நிறுவனம் பின்வரும் திட்டமிடப்பட்ட பயணிகள் சேவைகளைச் செய்தது:[4][5] மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia