பிந்துலு வானூர்தி நிலையம்
பிந்துலு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BTU, ஐசிஏஓ: WBGB); (ஆங்கிலம்: Bintulu Airport; மலாய்: Lapangan Terbang Bintulu) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் பிந்துலு பிரிவு; பிந்துலு மாவட்டத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[3] இந்த வானூர்தி நிலையம் சிறியதாக இருந்தாலும், போயிங் 747 போன்ற பெரிய விமானங்களைக் கையாளக் கூடியது. பிந்துலு நகரின் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாறுபிந்துலு வானூர்தி நிலையத்தின் வரலாறு 1934-ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. ஒரு முனையில் கடல் கடற்கரைக்கும்; மறுமுனையில் ஓர் ஆற்றுக்கும் இடையே ஓர் ஓடுபாதையைக் கொண்ட ஒரு வானூர்தி நிலையத்தை, அப்போதைய பிரித்தானிய அரசாங்கம் கட்டத் தொடங்கியது. நிதி சிக்கல்களின் காரணமாக 1938-இல் நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாட்டுப் படைகள், அந்த வானூர்தி நிலையத்தின் மீது குண்டுகள் வீசிக் கடுமையாகத் தாக்கின. நிலையம் பெரிதும் சேதம் அடைந்தது. போர்னியோ ஏர்வேஸ்பின்னர் ஆங்கிலேயர்கள் அந்த விமான ஓடுபாதையை மீண்டும் கட்டினார்கள். 1955-இல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. 2002-இல், பழைய வானூர்தி நிலையத்திற்குப் பதிலாக புதிய பிந்துலு வானூர்தி நிலையம் கட்டப்பட்டது. பின்னர், 1955 செப்டம்பர் 1-ஆம் தேதி, பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. போர்னியோ ஏர்வேஸ் வானூர்தி நிறுவனத்திற்குச் சொந்தமான இரு வகையான (de Havilland DH.89 Dragon Rapide); (Scottish Aviation Twin Pioneer) விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓடுபாதை மறுசீரமைப்பு1963-இல், டிசி-3 (DC-3) போன்ற பெரிய வகை விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1966-ஆம் ஆண்டில், கட்டித்தார் (bitumen) மூலம் ஓடுபாதை மறுசீரமைக்கப்பட்டது. மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக முனையக் கட்டிடமும் விரிவாக்கப்பட்டது. 1 ஜூலை 1968-இல், மலேசியா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Malaysia-Singapore Airlines) விமான நிறுவனம், போக்கர் 27 (Fokker 27) ரக விமானங்களின் சேவையை அறிமுகப்படுத்தியது. பழைய விமான நிலையம்பின்னர் 1981-இல், போக்கர் 50 (Fokker 50) ரக விமானங்களுக்காக நிலையத்தின் முனையக் கட்டிடப் பகுதி நீட்டிக்கப்பட்டது. பழைய விமான நிலையம் 30 மார்ச் 2003-இல் மூடப்பட்டது. நகரத்திற்கு வெளியே ஒரு புதிய இடத்திற்கு விமானச் சேவை மாற்றம் செய்யப்பட்டது.[4]. செப்டம்பர் 2005-இல், குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியா; பிந்துலு வானூர்தி நிலையத்தில் இயங்கத் தொடங்கியது. அதன் பின்னர் அதன் துணை நிறுவனமான பிளை ஏசியன் எக்ஸ்பிரஸ் (FlyAsianXpress), 1 ஆகஸ்ட் 2006-இல் முக்கிய உள்நாட்டு வழித்தடங்களில் சேவையை மேற்கொண்டது. 30 செப்டம்பர் 2007 வரை அந்தச் சேவை தொடர்ந்தது. 1 அக்டோபர் 2007 அன்று, அதன் பின்னர் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான மாஸ் விங்ஸ் நிறுவனத்திற்கு, சேவை மாற்றம் செய்யப்பட்டது. அந்தச் சேவை இன்று வரை தொடர்கிறது. சேவைபோக்குவரத்து புள்ளிவிவரங்கள்
உள்நாட்டுச் சேவைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia