மருடி வானூர்தி நிலையம்
![]() மருடி வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: MUR, ஐசிஏஓ: WBGM); (ஆங்கிலம்: Marudi Airport; மலாய்: Lapangan Marudi) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மருடி பிரிவு, மிரி மாவட்டம், மருடி நகரில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும். சரவாக் மாநிலத்தில் உள்ள வானூர்தி நிலையங்களில், மருடி வானூர்தி நிலையம், ஒரு நடுத்தரமான நிலையமாகும். ஒரே நேரத்தில் நான்கு டி அவாலாந்த் (de Havilland Canada DHC-6 Twin Otter) வானூர்திகளைக் கையாளும் திறன் கொண்டது. சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கிற்கு வட கிழக்கே 824 கி.மீ. (512 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. பொதுஇந்த நகரம் பாராம் ஆற்றின் (Baram River) கரையில், ஆற்றின் முகப்பில் இருந்து 100 கி.மீ. (62 மைல்) உட்பாகத்தில் உள்ளது. மிரி நிறுவப் படுவதற்கு முன்பு, மருடி நகரம், சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியின் நிர்வாக மையமாக இருந்தது. யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமான குனோங் முலு தேசிய பூங்காவிற்கு (Gunung Mulu National Park) நுழைவாயில் நகரமாகவும் விளங்குகிறது. அந்த வகையில், முலு தேசிய பூங்காவிற்குச் செல்ல விரும்புகிறவர்கள் மருடி வானூர்தி நிலையத்தின் சேவையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சேவை
விபத்துகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia