கூடாட் வானூர்தி நிலையம்
கூடாட் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: KUD, ஐசிஏஓ: WBKT); (ஆங்கிலம்: Kudat Airport (KIA); மலாய்: Lapangan Terbang Miri) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் கூடாட் நகரில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2] சபா மாநிலத்தின் கூடாட் பிரிவில் வாழும் மக்களுக்கான வானூர்திச் சேவை மையமாக விளங்குகிறது. கூடாட் நகரம் கோத்தா கினபாலுவில் இருந்து 190 கி.மீ. தொலைவில், கூடாட் தீபகற்பத்தில் அமைந்து உள்ளது. போர்னியோ தீவின் உச்ச மட்ட வடக்குப் பகுதி கிராமமான தஞ்சோங் சிம்பாங் மெங்காயாவ் (Tanjung Simpang Mengayau) கிராமத்திற்கு மிக அருகில் இந்த வானூர்தி நிலையம் உள்ளது.[3] பொதுகூடாட் வானூர்தி நிலையம் ஒரு பழைய இராணுவ வானூர்தி நிலையத்தின் தளத்தில் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஜாவா மற்றும் உள்ளூர் ஆட்களின் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி, ஜப்பானிய ஏகாதிபத்திய இராணுவம் விமான நிலையத்தைக் கட்டியது. இரண்டாம் உலகப் போரின் போது, ஓடு பாதை அமைப்பதற்கு, தார் பற்றாக்குறையினால் பவளப் பாறைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையம் கட்டப்படும் போது, கட்டாய உழைப்பின் காரணமாகவும்; மலேரியா நோயினாலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டார்கள். இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1945-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் B 52 ரக விமானங்களின் குண்டுவீச்சுகளால் ஓடு பாதை பெரிதும் பாதிக்கப்பட்டது. இறுதியில் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது.[4] சேவை
விபத்து
ஓடுபாதையில் இருந்து தள்ளிச் சென்று ஒரு வீட்டின் மீது மோதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் துணை விமானி உட்பட இரண்டு பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.[5][6][7] காட்சியகம்கூடாட் வானூர்தி நிலையத்தின் சில காட்சிகள்: மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia