பாரியோ வானூர்தி நிலையம்
பாரியோ வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: BBN, ஐசிஏஓ: WBGZ); (ஆங்கிலம்: Bario Airport (KIA); மலாய்: Lapangan Terbang Bario) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு; மிரி மாவட்டத்தில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[2] பாரியோவிற்கு மிரி; மருடி நகர்களில் இருந்து வழக்கமான விமானச் சேவைகள் உள்ளன.[3] பாரியோவில் முதல் விமான ஓடுதளம் சமய நோக்கங்களுக்காக 1953-இல் கட்டப்பட்டது. சரவாக் காலனித்துவ அரசாங்கம் 1961-இல் அந்த விமான ஓடுதளத்தை கையகப்படுத்தியது. ஒரு புதிய விமான ஓடுதளம் 1996-இல் கட்டி முடிக்கப்பட்டது.[4] பொதுபாரியோ என்பது 1000 மீ (3280 அடி) உயரத்தில் உள்ள பீடபூமியாகும். 13 முதல் 16 கிராமங்களைக் கொண்டது. கெலாபிட் சமூகத்தினர் அந்த உயர்நிலத்தில் நெல் சாகுபடி செய்கிறார்கள். "பரியோ" என்ற பெயர் கெலாபிட் மொழியில் இருந்து வந்தது. "காற்று" என்று பொருள். பாரியோவை "சாங்க்ரி-லா" Shangri-La சொர்க்கம் என்றும் அழைக்கிறார்கள்.[3] சேவை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia