மாஸ் கார்கோ
மாஸ் கார்கோ (ஆங்கிலம்: MASkargo Malaysia Airlines Cargo; மலாய்: MASkargo Malaysia Airlines Kargo) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (WMKK/KUL) மேம்பட்ட சரக்கு மையத்தில் (Advanced Cargo Centre) தலைமை அலுவலகத்தைக் கொண்ட ஒரு சரக்கு வானூர்தி நிறுவனம் ஆகும்.[1] இந்த நிறுவனம், மலேசியா எயர்லைன்சு (MAS) நிறுவனத்தின் சரக்குப் பிரிவு ஆகும். இதன் முக்கியமான இலக்கு: திட்டமிடப்பட்ட சேவைகள்; வானூர்தி சரக்குச் சேவைகள். தவிர வானூர்தி நிலையத்தில் இருந்து துறைமுகங்களுக்கு சரக்குகளைக் கொண்டு செல்வதிலும் ஈடுபட்டு உள்ளது. வரலாறு![]() மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் உலகம் முழுவதும் சரக்குகளை விநியோகிப்பதற்காக 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்தக் கட்டத்தில் ஓராண்டுக்கு 30,000 டன் சரக்குகளைக் கையாண்டது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 100 இடங்களில் சேவை செய்கிறது. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டது.[1] 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இரண்டு போயிங் 747-200F (Boeing 747-200F) சரக்கு வானூர்திகளுடன் மலேசியா எயர்லைன்சு நிறுவனத்தின் துணை நிறுவனமாக மாறியது.[2] நிதி நெருக்கடி30 ஏப்ரல் 2015-இல், மலேசியா எயர்லைன்சு நிறுவனம், நிதி நெருக்கடியின் காரணமாக, அதன் துணை நிறுவனமான மாஸ் கார்கோ நிறுவனத்தின் அனைத்து வானூர்திகளையும் குத்தகைக்கு விடுவது அல்லது விற்பனை செய்வது என அறிவித்தது.[6] எனினும், நவம்பர் 1, 2015-இல், மாஸ் கார்கோ மூடப்படாது என்று மலேசியா எயர்லைன்சு நிறுவனத்தின் தலைமை அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.[3] அக்டோபர் 2016-இல், பழைய போயிங் 747-400 ரக வானூர்திகள் இரண்டும் சேவையில் இருந்து படிப்படியாக நிறுத்தப்பட்டன. புதிதாக மூன்றாவது ஏர்பஸ் A330-200F (Airbus A330-200F) வானூர்தி, மாஸ் கார்கோ சேவையில் சேர்க்கப்பட்டது. வானூர்திகள்2017 ஆகஸ்டு நிலவரப்படி, மாஸ் கார்கோ பின்வரும் வானூர்திகளைச் சேவையில் கொண்டு இருந்தது.[4]
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia