கசார் மாவட்டம்
கசார் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள 33 மாவட்டங்களில் ஒன்றாகும். பெயர்க்காரணம்இந்த மாவட்டம், முன்பு இங்கு இருந்த கசாரி அரசாட்சியின் நினைவாக கசார் மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது அருகில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்திலிருந்து, 1 ஜூலை 1983 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். [1] அமைப்புஇந்த மாவட்டத்தின் தலைமை இடமாக சில்சார் நகரம் உள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் கர்பி அங்லோங் மாவட்டமும், கிழக்குப் பகுதியில் மணிபூர் மாநிலமும், தெற்குப் பகுதியில் கரீம்கஞ் மாவட்டமும், மேற்குப் பகுதியில் மேகாலயா மாநிலமும் எல்லையாக அமைந்துள்ளது.இதன் பரப்பளவு மொத்தம் 378 சதுர கிலோமீடராகும்.[2] இந்த மாவட்டம் ஏழு சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [3] தோலாய் பட்டியல் சாதிகள் மக்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது.[3] இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு சில்சார், சோனை, தோலை, உதார்பொண்டு, லக்கிபூர், பர்கோலா மற்றும் கட்டிகோரா. மக்கள்தொகை ஆய்வு2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் மொத்தம் 1,736,319 பேர் உள்ளனர். இங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.17 சதவிகிதம் ஆகவும், பாலின விகிதாச்சாரம் 958 ஆகவும், மக்களின் கல்வியறிவு 80.36 சதவிகிதம் ஆகவும், மக்களின் இன நெருக்க அடர்வு 459 ஆகவும் உள்ளது. [4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia