போங்கைகாவொன் மாவட்டம்
போங்கைகாவொன் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் போங்கைகாவொன் நகரம் ஆகும். இது அருகில் உள்ள கோஆல்பரா மாவட்டத்தில் இருந்து, 29 செப்டெம்பர் 1989 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.[1] அமைப்புஇந்த மாவட்டத்தின் தலைமை இடமாக போங்கைகாவொன் நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2510 சதுர கிலோமீடராகும்,[2] இந்த மாவட்டத்தின் வடக்கு, மேற்கு பகுதியில் கோக்ரஜ்கார் மாவட்டமும் கிழக்குப் பகுதியில் பார்பேட்டா மாவட்டமும் தெற்குப் பகுதியில் பிரம்மபுத்திரா ஆறும் எல்லையாக அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு போங்கைகாவொன் , பிஜினி, சல்மரா, மற்றும் அபயபுரி.இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[3] மக்கள்தொகை ஆய்வு2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் மொத்தம் பேர் உள்ளனர். 732,639 பேர் உள்ளனர். இங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.58 சதவிகிதம் ஆகவும், பாலின விகிதாச்சாரம் 961 ஆகவும், மக்களின் கல்வியறிவு 70.44 சதவிகிதம் ஆகவும், மக்களின் இன நெருக்க அடர்வு 425 ஆகவும் உள்ளது. [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia