மானசு தேசியப் பூங்கா
மானசு தேசியப் பூங்கா (Manas National Park) அல்லது மானசு வனவிலங்கு காப்பாகம் (Manas Wildlife Sanctuary) அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி தர்ரங் மாவட்டத்தில் அமைந்துள்ளது . இந்த வனப்பகுதியில் மானசு நதி பாய்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 391 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 1928 - ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற பலவகை விலங்குகளும், பலவகைப் பறவைகளும் இருக்கின்றன.[1] இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான யுனெசுகோ (UNESCO) அமைப்பு, 1992 ஆம் ஆண்டு இப்பகுதியை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[2][3] மேற்கோள்கள்வெளியிணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் Manas என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
|
Portal di Ensiklopedia Dunia