பிஸ்வநாத் சார்யாலி
பிசுவநாத் சார்யாலி (Biswanath Chariali), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் மேல் அசாம் கோட்டத்தில் உள்ள பிசுவநாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கவுகாத்திக்கு வடகிழக்கே 229.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; தேச்சுபூருக்கு வடகிழக்கில் 62.5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 8 வார்டுகளும், 4,454 வீடுகளும் கொண்ட பிசுவநாத் சார்யாலி நகரத்தின் மக்கள் தொகை 19,145 ஆகும். அதில் ஆண்கள் 9,771 மற்றும் பெண்கள் 9,374 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 959 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.69% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 90.88% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.37%, இசுலாமியர் 9.41%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.29%, சீக்கியர்கள் 0.30%, கிறித்தவர்கள் 0.34% மற்றும் பிறர் 0.29% ஆகவுள்ளனர். [1] மொழிகள்இந்நகரத்தில் அசாமிய மொழி 49.57%, வங்காள மொழி 26.96%, இந்தி மொழி 17.94% மற்றும் பிற மொழிகள் 5.53% மக்களால் பேசப்படுகிறது. நீர்வழிப் போக்குவரத்து மையம்கடல் மாலை திட்டம் மற்றும் பாரத்மாலா திட்டங்களின் பகுதியான பிரம்மபுத்திரா ஆறு தேசிய நீர்வழிச்சாலை எண் 2-இன் மையமாக பிசுவநாத் சார்யாலி நகரம் செயல்படுகிறது.[2] தேசிய நீர்வழிச்சாலை எண் 2, வடகிழக்கு இந்தியாவுடன் தேசிய நீர்வழிச்சாலை எண் 19 இணைக்கிறது.
போக்குவரத்துதேசிய நெடுஞ்சாலை எண் 15 தேச்சுபூர் நகரத்துடன் பிசுவநாத் சார்யாலியை இணைக்கிறது. பிசுவநாத் சார்யாலி தொடருந்து நிலையம்[3]கவுகாத்தி, கொல்கத்தா, சென்னை நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் தேச்சுபூரில் உள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia