மலாயா தொடருந்து, (மலாய்: Keretapi Tanah Melayuஆங்கிலம்: Malayan Railways; ஜாவி: كريتاڤي تانه ملايو برحد); என்பது மலேசியத் தீபகற்பத்தில் தொடருந்து சேவைகளை வழங்கும் முதன்மைத் தொடருந்து நிறுவனம் ஆகும்.
கிரேத்தாப்பி தானா மெலாயு (Keretapi Tanah Melayu Berhad) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, பரவலாக கே.டி.எம். (KTM) என அழைக்கப்படுகிறது.
பொது
கிரேத்தாப்பி தானா மெலாயு Keretapi Tanah Melayu
வகை
அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்; மலேசிய நிதி அமைச்சர்
நிறுவுகை
1992
தலைமையகம்
சுல்தான் இசாமுதீன் சாலை 50621 கோலாலம்பூர், மலேசியா Jalan Sultan Hishamuddin, 50621 Kuala Lumpur, Malaysia
முதன்மை நபர்கள்
முகமது ராணி இசாம் சம்சுதீன், தலைமை நிர்வாக அதிகாரி
பகாங்கோலா லிப்பிஸ் நகரத் தொடருந்து நிலையத்தில்.கே.டி.எம். நிறுவனத்தின் நகரிடை தொடருந்து
இந்தத் தொடருந்து அமைப்பு பிரித்தானிய குடியேற்றக் காலத்திலேயே வெள்ளீயப் போக்குவரத்திற்காகக் கட்டமைக்கப்பட்டது.
முன்னதாக இது மலாய் இராச்சியங்களின் கூட்டமைப்பு தொடருந்து(Federated Malay States Railways) எனவும் மலாயா தொடருந்து நிர்வாகம்(Malayan Railway Administration) எனவும் அழைக்கப்பட்டது.
வரலாறு
1962-ஆம் ஆண்டு முதல் தற்போதைய பெயரான கிரேத்தாப்பி தானா மெலாயு என்று (சுருக்கமாக கே.டி.எம்.) அழைக்கப் படுகின்றது. 1992-ஆம் ஆண்டில் இந்த அமைப்பு முழுமையும் மலேசிய அரசாங்கத்தின் அரசுடைமைத் தனிநிறுவனமாக வரையறுக்கப்பட்டது.[1]