காப்பார் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), காப்பார் தொகுதி 44 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2]
வரலாறு
இந்த காப்பார் தொகுதி 1974-ஆம் ஆண்டில் நாடாளுமன்றப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அதன் பின்னர்;
ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடையே மறுபகிர்வு செய்யப்பட்டது. 1984-ஆம் ஆண்டில் கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் துறைமுகம் பகுதிகளில் இருந்து மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியாக உருவாக்கப்பட்டது.[3]
இந்த நகரத்தின் மேற்கில், பெரிய அளவிலான சதுப்பு நிலம் உள்ளது. ஆனால் கடலை ஒட்டிய சில பகுதிகளில் மட்டும் மீட்கப்பட்டு உள்ளது.[4]
காப்பார் தமிழர்கள்
காப்பார் நகரம் மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்களைக் கொண்ட ஒரு பகுதி. மலாய் மக்களில் பலர் ஜாவானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். நகரப் பகுதி சீனர்களால் நடத்தப்படும் கடைகளினால் நிரம்பியுள்ளது.
இந்தியர்கள் பெரும்பாலும் புறநகர்ப்பகுதிகளில் வாழ்கின்றனர். காப்பார் பகுதியில் நிறைய செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. அந்தத் தோட்டங்கள் ரப்பர் தோட்டங்களாக இருந்த போது தமிழர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள்.