குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி
குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Guntur West Assembly constituency) என்பது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத்தொகுதியாகும்.[1] தடிகொண்டா, மங்களகிரி, பொன்னூர், தெனாலி மற்றும் குண்டூர் கிழக்கு ஆகியவற்றுடன் குண்டூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகும்.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்று, பின்னர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மாறிய மதலி கிரிதர ராவ் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3][4] 25 மார்ச் 2019 நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 265,135 வாக்காளர்கள் உள்ளனர். [5] வரலாறுமுன்னதாக குண்டூர்-2 சட்டமன்றத் தொகுதி என அழைக்கப்பட்ட இது , 2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய உத்தரவில் சில சிறிய மாற்றங்களுக்கு உள்ளாகி குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி எனப் பெயரிடப்பட்டது.[6]:15 மண்டலங்கள்குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளாக குண்டூர் மண்டலம் (பகுதி), குண்டூர் (மாநகர்) (பகுதி) மற்றும் குண்டூர் மாநகர பகுதி எண்.1 முதல் 6 மற்றும் 24 முதல் 28 வரையுள்ள இடங்கள் உள்ளன.[7] சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்குண்டூர் மேற்கு (2009–தற்போது)
குண்டூர்-2 (1955-2009)
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia