செண்டராட்டா
செண்டராட்டா (மலாய்: Jenderata ; ஆங்கிலம்: Jenderata; சீனம்: 延达塔) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இங்கு எண்ணெய்ப் பனை உற்பத்தி முக்கியத் தொழிலாகும். இந்த நகரத்தின் சுற்று வட்டாரங்களில் பல தென்னைத் தோட்டங்கள் உள்ளன. செண்ட்ராட்டாவில் இருந்து தெலுக் இந்தான் நகருக்குச் செல்லும் வழியில் அந்தத் தோட்டங்களைக் காண முடியும். செண்டராட்டா நகருக்கு அருகில் உள்ள நகரங்கள்: பொதுசெம்பனை தொழிற்சாலைகள்பிரித்தானிய காலனித்துவ காலத்தில் செண்டராட்டாவில் முதலில் ரப்பர் பயிரிடப்பட்டது. ரப்பர் மற்றும் செம்பனை கொண்டு செல்ல ஓர் இரயில் பாதை அமைக்கப்பட்டது.[1] செண்டராட்டாவில் யூனிடாட்டா (Unitata) மற்றும் யுனைடெட் பிளான்டேசன் (United Plantation Sdn Bhd) நிறுவனங்களுக்குச் சொந்தமான செம்பனை தொழிற்சாலைகள் உள்ளன. அந்தத் தொழிற்சாலைகளை இந்த இரயில் பாதை நேரடியாகத் தெலுக் இந்தான் படகு துறையுடன் இணைக்கிறது.[2] செண்டராட்டா தோட்டம் ஒரு பெரிய செம்பனை தோட்டம் ஆகும். ஊத்தான் மெலிந்தாங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. 1906-இல் நிறுவப்பட்டது. செண்டராட்டா விமான நிலையம்செண்டராட்டாவில் சிறு விமானங்கள் தரையிறங்க ஒரு சிறிய விமான நிலையமும் உள்ளது. நில வழியை விட விமான வழியைப் பயன்படுத்த பிரித்தானிய தோட்ட நிர்வாகிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. இந்த விமான நிலையம் யுனைடெட் பிளான்டேசன் நிறுவனத்திற்கு சொந்தமானது. 1906-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது.[3] செண்டராட்டா தமிழர்கள்1846-ஆம் ஆண்டில் அப்போதைய மலாயாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து 1800 தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் பலர் செண்டராட்டா; பெர்னாம்; ஊத்தான் மெலிந்தாங்; ருங்குப்; சங்காட் ஜோங் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.[4] 1840-ஆம் ஆண்டுகளில் லைபீரியா காபி மலாயாவில் பயிர் செய்யப்பட்டு நல்ல விளைச்சலைக் கொடுத்தது. அந்த வகையில் லைபீரியா காபிக்கு தெலுகான்சன் முன்னோடியாக விளங்கியது.[5] அந்தக் காலக் கட்டத்தில் ஊத்தான் மெலிந்தாங் பகுதிகளில் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான காபி, தென்னைத் தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவியது. அதை நிவர்த்தி செய்ய ஆந்திராவில் இருந்து 1000 தமிழர்களும் ஆந்திர வம்சாவளியினரும் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களில் ஆந்திர வம்சாவளியினரே அதிகம்.[6] செண்டராட்டா தமிழ்ப்பள்ளிகள்பேராக்; பாகன் டத்தோ மாவட்டம் (Bagan Datuk District) செண்டராட்டா கிராம நகர்ப் புறத்தில் 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 160 மாணவர்கள் பயில்கிறார்கள். 34 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia