கம்பார் மாவட்டம்
கம்பார் மாவட்டம் (Daerah Kampar) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் செரி இசுகந்தர் நகரத்தை மையமாகக் கொண்டது. பேராக் தெங்கா மாவட்ட மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது; இருப்பினும் பாரிட் நகரமே இந்தப் பகுதியில் மிகப் பெரிய குடியேற்ற இடமாகும். 2009 மே மாதம் 21-ஆம் தேதி, பேராக் சுல்தான் கம்பார் மாவட்டத்தை மாநிலத்தின் 10-வது மாவட்டமாக அறிவித்தார். அதன் பின்னர் இது ஒரு மாவட்டத் தகுதியைப் பெற்றது. கம்பார் மாவட்டம் மாநிலத்தின் சிறிய மாவட்டமாகும். கம்பார் நகரத்தை மையமாகக் கொண்டு கம்பார் மாவட்ட மன்றம் இயங்கி வருகிறது. பொதுவரலாற்று ரீதியாக, கம்பார் மாவட்டம் ஒரு காலத்தில் ஈயத்திற்குப் பிரபலமானது, இது 18-ஆம் நூற்றாண்டில் ஈய உற்பத்தியில் முக்கிய இடமாகவும் முதல் இடமாகவும் இருந்தது. கிந்தா பள்ளத்தாக்கில் கம்பார் மாவட்டம் ஒரு பகுதியாகும்.[1] 19-ஆம் நூற்றாண்டில், கிந்தா மாவட்டம் அதன் ஈய உற்பத்திக்கு பிரபலம் அடைந்தது. உலகில் ஈயம் உற்பத்தி செய்யும் பள்ளத்தாக்குகளில் கிந்தா பள்ளத்தாக்கு முதலிடம் பெற்றது.[2] நிர்வாகப் பிரிவுகள்கம்பார் மாவட்டம் 2 முக்கிம்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.
மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்பின்வரும் கம்பார் மாவட்ட மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[3]
மலேசிய நாடாளுமன்றம்மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கம்பார் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.
பேராக் மாநிலச் சட்டமன்றம்பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் கம்பார் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia