1919 ஆம் ஆண்டு ஆகத்து 12 அன்று அகமதாபாத் நகரில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும், இயற்பியலிலும் இருந்தது.
ஆய்வு நிலையங்கள் நிறுவுதல்
இங்கிலாந்தில் பி. எச். டி ஆராய்ச்சியை முடித்துத் திரும்பிய சாராபாய், ஆமதாபாதில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory) 11 நவம்பர் 1947 இல் நிறுவினார்.[7] 1955 இல் காசுமீரம் குலுமார்கில் அதன் கிளை ஒன்றையும் நிறுவினார். பின்னர், திருவனந்தபுரம், கொடைக்கானல் ஆகிய இடங்களிலும் ஆய்வகங்களை நிறுவினார்.
இந்தியாவை விண்வெளி யுகத்திற்கு இட்டுச்செல்லல்
இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக இருந்தார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.
பிற துறைகளில் பங்கீடு
விண்வெளித்திட்டங்கள் தவிர, பஞ்சாலைத் தொழில், மேலாண்மைப்பயிற்று நிலையம் ஆகியவற்றையும் தொடங்கினார்.
விகாஸ் (VIKAS) எஞ்சின் என்பது 1970 களில் இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தால் (LPSC) உருவாக்கப்பட்ட ஹைப்பர்கோலிக் திரவ எரிபொருள் செயற்கைக்கோள் எஞ்சின்களின் ஒரு குடும்பம் முனைவர். சாராபாயின் நினைவாகப் பெயரிடப்பட்டது
1973இல் உலகளாவிய வானியல் ஒன்றியம் நிலவிலுள்ள அமைதிக்கடல் (Sea of Serenity) பகுதியில் உள்ள ஒரு பெருங்குழிக்கு விக்கிரமின் பெயரைச் சூட்டினர்.[8][9]