இருசிகேசு முகர்ச்சி
![]() இருசிகேசு முகர்ச்சி (Hrishikesh Mukherjee, கிரந்த ஒலிப்பு:ரிஷிகேஷ் முகர்ஜி) (30 செப்டம்பர் 1922 – 27 ஆகத்து 2006) புகழ்பெற்ற இந்தித் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதன்மையான திரைப்படங்களாக சத்தியகாம், இச்சுப்கே இச்சுப்கே, அனுபமா, ஆனந்த், அபிமான், குஃட்ஃடி, கோல் மால், ஆசீர்வாத், பவார்ச்சி, கிசி சே ந கேஹ்னா, நமக் அராம் அமைந்திருந்தன. இருசி-டா எனப் பரவலாக அறியப்பட்டவரின் நாற்பதாண்டுத் திரைவாழ்வில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமது சமூகத் திரைப்படங்களுக்காக புகழ்பெற்றிருந்த இருசி-டா இந்திய திரைப்படத்துறையின் பகட்டான மசாலா படங்களுக்கும் மெய்நிகரான கலைப்படங்களுக்கும் இடைப்பட்ட மத்திய சினிமாவின் முன்னோடி என அறியப்பட்டார்.[1][2][3][4] He also remained the chairman of the இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் (CBFC) தலைவராகவும் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (NFDC) தலைவராகவும் விளங்கினார்.[5] 1999இல் இவருக்கு இந்திய அரசு தாதாசாகெப் பால்கே விருது வழங்கியது; 2001இல் பத்ம விபூசண் விருது பெற்றார். எட்டு பிலிம்பேர் விருதுகள் பெற்ற இருசி-டாவிற்கு 2001இல் என்டிஆர் தேசிய விருது வழங்கப்பட்டது. மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia