1996 இந்தியப் பொதுத் தேர்தல்
பின்புலம்இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். ஆட்சியில் இருந்த பி. வி. நரசிம்ம ராவ் அரசு ஆட்சியாளர் எதிர்ப்பு காரணமாக குறைவான இடங்களிலேயே வென்றது. எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு நாடாளுமன்றம் ஆக உருவானது. அதிக இடங்களை வென்ற கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வாஜ்பாயை அரசமைக்க இந்தியக் குடியரசுத் தலைவர் அழைத்தார். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லையென்பதால் தேவையான ஆதரவைத் திரட்ட வாஜ்பாய்க்கு 13 நாட்கள் தரப்பட்டன. ஆனால் பிறகட்சிகள் பாஜகவை மதவாத கட்சி என்ற தவறான பார்வையால் அதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன. வாஜ்பாய் பதவி விலகினார். அதன் பிறகு எதிர் கட்சியான காங்கிரசுக்கும் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி. ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க வைத்தனர். இக்கூட்டணிக்கு காங்கிரசு (அமைச்சரவையில் சேராமல்) வெளியிலிருந்து ஆதரவு தர முன்வந்தது. பிரதமர் பதவிக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவரும் அன்றைய கர்நாடக மாநில முதல்வருமான தேவகவுடா தேர்ந்தெடுக்கபபட்டார். முடிவுகள்
தேர்தலுக்குப் பின் உருவான கூட்டணி ஆட்சி நிலவரம்:
இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia