கோலாகாட் மாவட்டம்
கோலாகாட் மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமை அலுவலகத்தை கோலாகாட் நகரில் அமைத்துள்ளனர். இந்த மாவட்டம் 3502 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. [1] ஆற்றிற்கு அருகில் சந்தையை அமைத்திருந்த காரணத்தினால் கோலாகாட் என்ற பெயர் ஏற்பட்டது. ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாரிகள் தங்கள் மொழியில் இப்பெயரைச் சூட்டியுள்ளனர். கோலா என்றால் சந்தை என்று பொருள். கட் என்றால் ஆற்றங்கரை என்று பொருள். இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது. இந்த மாவட்டத்தில் கசிரங்கா தேசியப் பூங்காவின் பகுதிகள் அமைந்துள்ளன. பொருளாதாரம்இந்த மாவட்டத்தின் பொருளாதார நிலை பயிர்களைச் சார்ந்து உள்ளது. தேயிலை, அரிசி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிடுகின்றனர். இங்கு பல டீ தோட்டங்கள் இருக்கின்றன. அதிக வருமானத்தைத் தரும் பயிராக தேயிலை விளங்குகிறது. மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 1,058,674 மக்கள் வசித்தனர். [2] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 302 பேர் வாழ்கின்றனர். [2] ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 961 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [2] இங்கு வாழ்வோரில் 78.31% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2] இங்கு பழங்குடியின இனத்தைச் சேர்ந்த பூர்விக மக்கள் வாழ்கின்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாரிகளும், வங்காளிகளும் நகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர். அரசியல்இந்த மாவட்டத்தின் பகுதிகள் கலியாபர் மக்களவைத் தொகுதியில் உள்ளன.[3] சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia