தேவகிரி யாதவப் பேரரசு
![]()
தேவகிரி யாதவப் பேரரசு (Seuna or Yadavas of Devagiri) (850–1334), மைய இந்தியாவில் துங்கபத்திரைக்கும் நர்மதைக்கும் இடைப்பட்ட பகுதிகளான தற்கால மகாராஷ்டிரம், வடக்கு கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை ஆண்ட யாதவ குலத்தினரைக் குறிக்கிறது. யாதவப் பேரரசின் தலைநகராக தேவகிரி எனும் தற்கால தௌலதாபாத் நகராகும். மேலைச் சாளுக்கியப் பேரரசில் சிற்றரசர்களாக வாழ்ந்த யாதவர்கள், மேலைச் சாளுக்கியப் பேரரசு 12ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடையும் தறுவாயில், இரண்டாம் சிங்கன்னன் தலைமையில் யாதவப் பேரரசு நிர்மாணிக்கப்பட்டது. ஐந்தாம் பில்லமாமல்லுகியின் மகன் ஐந்தாம் பில்லமா (1173–1192),[1] சௌன யாதவ அரசமரபை நிறுவினார். சாளுக்கியரின் தலைநகர் பசவகல்யாண் எனும் கல்யாணி நகரை 1187இல் கைப்பற்றி, பின் யாதவப் பேரரசின் தலைநகர் தேவகிரியை (தற்கால தௌலதாபாத்) நிர்மாணித்தார்.[2] இரண்டாம் சிங்கண்ணா1200 முதல் 1247 முடிய ஆட்சி யாதவப் பேரரசின் பெரும் அரசனான இரண்டாம் சிங்கண்ணன் ஆவார். தனது ஆட்சி காலத்தில் யாதவப் பேரரசை தெற்கே நர்மதை ஆறு முதல் வடக்கே துங்கபத்திரை ஆறு வரை விரிவு படுத்தினான். தெற்கில் ஹொய்சாளப் பேரரசும், கிழக்கே காக்காதியர் அரசும், வடக்கே சாளுக்கியப் பேரரசும் யாதவப் அரசின் எல்லைகளாக உள்ளது.[1][3] இவர் சிங்கனாப்பூர் என்ற நகரை புதிதாக நிர்மானித்தார். இவர் காலத்தில் வானவியல், சமசுகிருதம், கர்நாடக இசை ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்தன. [4]இவர் கன்னட மொழி கவிஞர் சங்தேவ் மகராஜ் என்பவரை ஆதரித்தவர். இராமச்சந்திராஇரண்டாம் சிங்கன்னனின் பேரன் இராமச்சந்திரா 1271 முதல் 1309 முடிய தேவகிரி யாதவப் பேரரசை ஆண்டார்.[5] 1294-இல் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி தேவகிரியை கைப்பற்றினான். அலாவுதின் கில்சிக்கு இராமச்சந்திரா பெருந்தொகையை கப்பமாக செலுத்தி மீண்டும் இராமச்சந்திரா தேவகிரியை ஆண்டார்.[6] மாலிக் கபூர் தலைமையிலான அலாவுதீன் கில்சியின் பெரும் படைகள் 1307இல் மீண்டும் தேவகிரியை தாக்க வந்த போது, இராமச்சந்திரா, சுல்தான் படைகளுடன் போரிடாது சரண் அடைந்தார். 1310-இல் மாலிக் கபூர் தேவகிரியிலிருந்து காகதீயப் பேரரசின் மீது படையெடுத்தான். பேரரசின் வீழ்ச்சிஇராமசந்திராவின் மகன் மூன்றாம் சிங்கண்ணன், அலாவூதின் கில்சியின் மேலாண்மையை ஏற்காததால், 1313-இல் மாலிக் கபூர் தலைமையில் நடந்த போரில் மூன்றாம் சிங்கண்ணன் கொல்லப்பட்டார்.[7] அலாவுதின் கில்ஜியின் படைகள் தேவகிரியை கைப்பற்றி, தில்லி சுல்தானகத்துடன் 1317-இல் இணைக்கப்பட்டது. முகமது பின் துக்ளக் காலத்தில் தேவகிரி நகரத்தின் பெயர் தௌலதாபாத் என மாற்றப்பட்டது.[3] மேலைச் சாளுக்கியர் பேரரசின் யாதவ சிற்றரசுகள்
யாதவப் பேரரசர்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia