இசுபிரிண்ட் விரைவுச்சாலை
, (ஆங்கிலம்: Sprint Expressway அல்லது Western KL Traffic Dispersial System; மலாய்: Lebuhraya Sprint அல்லது Sistem Penyuraian Trafik KL Barat) என்பது மலேசியா’ சிலாங்கூர்’ கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய விரைவுச்சாலை பிணையம் ஆகும்.
பெட்டாலிங் ஜெயா; டாமன்சாரா போன்ற மேற்கு புறநகர்ப் பகுதிகளில் இருந்து கோலாலம்பூர் நகரின் நெரிசலான உள் நகரச் சாலைகளுக்குள் செல்லும் போக்குவரத்தைக் கலையச் செய்வதற்காக இந்த விரைவுச்சாலை கட்டப்பட்டது. இது மூன்று-வழி இரட்டைப் பாதையாகும்.[1]
பொது
இந்த விரைவுச் சாலை மேற்குப் பரவல் இணைப்புத் திட்டம்(Western Dispersal Link Scheme) என்றும் அழைக்கப் படுகிறது. கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில், அந்த நெரிசலைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அதிவேக நெடுஞ்சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
26.5 km (16.5 mi) நீளம் கொண்ட இந்த விரைவுச்சாலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது:
கெரிஞ்சி இணைப்பு(Kerinchi Link)
டாமன்சாரா இணைப்பு(Damansara Link)
பெஞ்சாலா இணைப்பு(Penchala Link)
வரலாறு
கிள்ளான் பள்ளத்தாக்கின் இஸ்பிரிண்ட் விரைவுச்சாலையின் டாமன்சாரா இணைப்புப் பகுதி.
இஸ்பிரிண்ட் அதிவேக விரைவுச்சாலையை அமைப்பதற்கான திட்டம் 1997-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் ஜாலான் டாமன்சாராவில் போக்குவரத்து நெரிசல்கள் அளவுக்கு அதிகமாக இருந்தன. அதைக் கட்டுப்படுவதற்கு மாற்றுவழி தேடும் போது இந்த விரைவுச்சாலை அமைப்பதற்கான திட்டம் உருவானது.
இந்த விரைவுச்சாலையை அமைப்பதற்கான திட்டம் சிஸ்டம் பென்யுரையான் டிராபிக் (Sistem Penyuraian Trafik KL Barat Sdn Bhd - Sprint) (இசுபிரிண்ட்) எனும் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.
ஒப்பந்தம்
1997 அக்டோபர் 23-ஆம் தேதி, இஸ்பிரிண்ட் விரைவுச் சாலையின் மேம்பாடு, வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு, செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்காக மலேசியா அரசாங்கத்திற்கும் லிட்ராக் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அத்துடன் பெஞ்சாலா இணைப்பின் (Penchala Link) கட்டுமானத்திற்காக மேலும் ஒரு துணை ஒப்பந்தம் 1998 செப்டம்பர் 4-இல் கையெழுத்தானது. சாவடிக் கட்டணம் வசூலிக்கும் காலம் 1998 டிசம்பர் 15-அம் தேதி தொடங்கி 33 ஆண்டுகள்; அதன் பின்னர், கட்டண வசூல் நிறுத்தப்பட்டு, நெடுஞ்சாலைகள் மலேசிய அரசிடம் ஒப்படைக்கப்படும் என ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
விரைவுச்சாலை கட்டுமானம்
1999-இல் கட்டுமானம் தொடங்கியது. ஜாலான் டாமன்சாரா, ஜாலான் காயூ ஆரா, ஜாலான் ஸ்ரீ அர்த்தாமாஸ் மற்றும் ஜாலான் செமாந்தான் போன்ற பல முக்கிய சாலைகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை இசுபிரிண்ட் விரைவுச்சாலை கட்டுமானத்தில் அடங்கும்.
கெரிஞ்சி இணைப்பு; டாமன்சாரா இணைப்பு; ஆகிய இரு இணைப்புகளும் 2001-இல் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 2004-இல் பெஞ்சாலா இணைப்பு திறக்கப்பட்டது.
முன்னோடி சாலைகள்
இசுபிரிண்ட் விரைவுச் சாலையின் கட்டுமானம் பின்வரும் பல முக்கிய சாலைகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது:
இந்த விரைவுச்சாலை சில குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டுள்ளது:
கெரிஞ்சி இணைப்பு: மலேசியாவின் முதல் இரட்டை அடுக்கு வழித்தடம்
பெஞ்சாலா சுரங்கப் பாதை: மலேசியாவின் முதல் அகலமான சுரங்கப்பாதை.
கட்டணமில்லா சாலை: பெட்டாலிங் ஜெயாவின் பிரிவு 16 (Section 16); மற்றும் பிரிவு 17- (Section 17); ஆகிய இரு பிரிவுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு, டாமன்சாரா இணைப்பில் 3 கி.மீ. சாலைக்கு கட்டணமில்லா சாலை