மதுரை தொடருந்து கோட்டம்
மதுரை தொடருந்து கோட்டம் (Madurai railway division) என்பது இந்தியாவின் இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் ஒரு தொடருந்து கோட்டமாகும். இந்தக் கோட்டம் அதிகாரப்பூர்வமாக 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 1,356 கிமீ (843 மைல்) நீளத்துக்கு மேல் பரவியுள்ளது, இது தென்னக இரயில்வேயின் மிகப்பெரிய தொடருந்து கோட்டமாகும்.[1] திருவனந்தபுரம் தொடருந்து கோட்டம் உருவாவதற்கு முன்பு, இது நாட்டிலேயே மிகப்பெரிய தொடருந்து கோட்டங்களில் ஒன்றாக இருந்தது. தற்போது இது தமிழ்நாட்டின் பன்னிரண்டு மாவட்டங்களையும், கேரளத்தின் ஒரு மாவட்டத்தையும் உள்ளடக்கியது. இதன் தலைமையகம் மதுரையில் உள்ளது. இந்க் கோட்டத்தில் முக்கிய வருவாய் ஈட்டும் சந்திப்புகளாக மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய சந்திப்புகள் உள்ளது. இந்த நிலையங்களில் பயணிகள் மிகுதியாக வந்து செல்கின்றனர்.[சான்று தேவை] வரலாறுதோற்றம்![]() இப் பகுதியில் முதல் தொடருந்து பாதை 1857 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அது மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளி வழியாக திண்டுக்கல்லை இணைக்கும் வகையில் உருவாக்கப்படிருந்தது. அடுத்த ஆண்டு, மதுரையில் இருந்து துறைமுக நகரான தூத்துக்குடிக்கு தொடருந்து பாதை போடும்பணி நிறைவடைந்தது. அதே ஆண்டில், மணியாச்சியிலிருந்து திருநெல்வேலிவரை பிரிந்து செல்லும் மற்றொரு பாதை திறக்கப்பட்டது.[1] மற்ற தற்போதைய பாதைகளில் பெரும்பாலானவை இருபதாம் நூற்றாண்டில் முடிக்கப்பட்டவை. அவை பின்வருமாறு:[1]
துவக்கம்திருநெல்வேலியையும் உள்ளடக்கிய கோட்டத்தின் தலைமையகத்தை மதுரையில் அமைக்க அரசு முடிவு செய்தது. எர்ணாகுளம்-திருவனந்தபுரம் வழித்தடம், திருவனந்தபுரம்-நாகர்கோவில்-திருநெல்வேலி-மதுரை வழித்தடம், கொல்லம்-செங்கோட்டை-திருநெல்வேலி வழித்தடம், ராமேஸ்வரம்-மானாமதுரை - மதுரை வழித்தடம், மானாமதுரை-காரைக்குடி-திருச்சி வழித்தடம், மதுரை-திண்டுக்கல்-பொள்ளாச்சி வழித்தடம், காரைக்குடி-திருத்துறைப்பூண்டி-திருவாரூர் வழித்தடம், மதுரை-போடிநாயக்கனூர் வழித்தடம் ஆகியவற்றை உள்ளடக்கிய மதுரை ரயில்வே கோட்டம் 1956 இல் உருவாக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து வழித்தடங்களும் அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டில், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தை உருவாக்க இந்தக் கோட்டம் மறு சீரமைக்கப்பட்டது. மதுரை கோட்டத்தின் மீட்டர் கேஜ் பாதைகள் தக்கவைக்கப்பட்ட நிலையில், மதுரை கோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அனைத்து அகலப் பாதை வழித்தடங்களும் திருவனந்தபுரம் கோட்டத்திற்கு மாற்றப்பட்டன. இதனால், திருவனந்தபுரம்-நாகர்கோவில்-கன்னியாகுமரி அகலப்பாதை வழித்தடம் மற்றும் கட்டுமானத்தில் இருந்த திருநெல்வேலி-நாகர்கோவில் அகலப்பாதை வழித்தடம் ஆகியவை திருவனந்தபுரம் கோட்டத்திற்கு மாற்றப்பட்டன. இதனால் மதுரைக் கோட்டத்தின் அதிகார வரம்பு 1356 கி.மீ. என குறைந்தது.[2] அப்போது, திருநெல்வேலி-மதுரை வழித்தடத்தை அகலப் பாதையாக மாற்றும் போது, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் மீண்டும் மதுரை கோட்டத்திற்கு மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டது. திருநெல்வேலி-மதுரை வழித்தடம் 8-4-1981 அன்று அகலப் பாதையாக மாற்றப்பட்டது.[3] நிர்வாகமும் அதிகார வரம்பும்இந்தக் கோட்டமானது தமிழ்நாடு, கேரளம் என இரு மாநிலங்களில் பரவியுள்ளது. தமிழ்நாட்டில் இது கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய பன்னிரண்டு மாவட்டங்களுக்கு சேவை செய்கிறது:. கேரளத்தில், இந்தக் கோட்டமானது கொல்லம் மாவட்டம் கிளிகொல்லூர் தொடருந்து நிலையம் வரை தன் எல்லையைக் கொண்டுள்ளது.[4] நிலையங்களின் வகைப்பாடுஇந்த பட்டியலில் மதுரை தொடருந்து கோட்டத்தின் கீழ் உள்ள நிலையங்கள் மற்றும் அவற்றின் நிலைய வகைப்பாடு ஆகியவை அடங்கும்.[5][6][7]
நாட்டரசன்கோட்டை, கருப்பட்டி, நெடுகுளம், மானாமதுரை கிழக்கு, குளத்தூர், தொண்டைமாநல்லூர் மற்றும் சில தொடருந்து நிலையங்கள் பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டிற்கான மதுரை கோட்டத்தில் உள்ள நிலையங்கள் மற்றும் அதன் எம். எஸ். ஜி வகைகளின் பட்டியல்.[8] செயல்திறனும் வருவாயும்இந்தக் கோட்டம் 2013 ஆம் நிதியாண்டில் அதன் செயல்திறன் வருவாய் பிரிவுகளுக்கு இடையேயான ஒட்டுமொத்த செயல்திறன் - சிறந்த பிரிவு - விருதை வென்றது. 2013-14 ஆம் ஆண்டிற்கான மொத்த தொடக்க வருவாய் ரூ 576.29 கோடியாக உள்ளது, இது 2012-13 ஆம் ஆண்டின் வருவாயான ரூ 523.68 கோடியை ஒப்பிடிம்போது ஒட்டுமொத்த வருவாயில் 10% வளர்ச்சி என தெரிகிறது.[9]
திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [10][11][12][13][14] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் பின்வரும் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, விருதுநகர், தென்காசி, கோவில்பட்டி, இராசபாளையம், சிறீவில்லிப்புத்தூர், திருச்செந்தூர், இராமநாதபுரம், சோழவந்தான், புதுக்கோட்டை, காரைக்குடி சந், மணப்பாறை, பரமக்குடி, அம்பாசமுத்திரம், பழனி, தூத்துக்குடி, திண்டுக்கல் சந்திப்பு, இராமேசுவரம் போன்ற தொடருந்து நிலையங்கள் தமிழ்நாட்டிலிருந்தும், புனலூர் கேரளாவிலிருந்தும் புதுப்பிக்கும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. [15][16][17][18][19] செயல்பாடுகளும் சேவைகளும்வழக்கமான தொடருந்துகள்
சிறப்பு தொடருந்துகள்
நிலையங்கள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia