ஜிந்த் சமஸ்தானம்
ஜிந்த் சமஸ்தானம் (Jind State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சங்கரூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜிந்த் சமஸ்தானம் 3,460 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 3,24,676 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. 1940-ஆம் ஆண்டில் ஜிந்த் சமஸ்தானத்தின் ஆண்டு வருவாய் ரூபாய் 30,00,000 ஆகும். இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் . வரலாறுமராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ஜிந்த் சமஸ்தானம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற ஜிந்த் சமஸ்தான மன்னர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. ஜிந்த் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி ஜிந்த் சமஸ்தானம் 20 ஆகஸ்டு 1948 அன்று பஞ்சாப் மாநிலத்துடன் இணக்கப்பட்டது.
இதனையும் காண்க
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia