தரம்பூர் இராச்சியம்
தரம்பூர் இராச்சியம் (Dharampur State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் தெற்கு குஜராத்தில் உள்ள வல்சாடு மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் தரம்பூர் ஆகும். 1892ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தரம்பூர் இராச்சியம் 1823 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,102,000 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. வரலாறு![]() 1680-ஆம் ஆண்டில் தரம்பூர் இராச்சியத்தை நிறுவியவர் இராஜபுத்திர குல சிசோடியா வம்சத்தின் சகாதேவன் ஆவார். மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த தரம்பூர் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற தரம்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். தரம்பூர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் கீழ் செயல்பட்ட சூரத் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி தரம்பூர் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது. தற்போது தரம்பூர் இராச்சியத்தின் பகுதிகள் வல்சாடு மாவட்டத்தில் உள்ளது. ![]() ஆட்சியாளர்கள்தரம்பூர் இராச்சிய மன்னர்கள் ராணா அல்லது மகாராணா பட்டத்துடன் ஆட்சி செய்தனர்.[1]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia