கூச் பெகர் சமஸ்தானம்
![]() ![]() ![]() ![]() கூச் பெகர் இராச்சியம் (Cooch Behar)[1]இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கூச் பெகர் நகரம் ஆகும். இது தற்கால மேற்கு வங்காளம் மாநிலத்தின் கூச் பெகர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டில் கூச் பெகர் இராச்சியம் 3,385 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். கூச் பெகர் சமஸ்தானம் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாண ஆளுநரின் கீழ இருந்தது.[2] வரலாறு1586-ஆம் ஆண்டில் காமதா இராச்சிய மன்னர் நர நாராயணன் இறந்த பிறகு காமதா இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளை அகோம் இராச்சியத்தினர் கைப்பற்றினர். எனவே காமதா இராச்சியத்தின் மேற்கு பகுதியில் உள்ள கூச் பெகர் நகரத்தை தலைநகராகக் கொண்டு கூச் பெகர் இராச்சியத்தை நிறுவினர். இந்த இராச்சியம் அடிக்கடி திபெத் மற்றும் பூட்டான் இராச்சியத்தினரின் படையெடுப்புகளுக்கு உள்ளாகியது. எனவே கூச் பெகர் இராச்சியத்தினர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் படை உதவியை நாடினர். 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற கூச் பெகர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது வங்காள மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. கூச் பெகர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி கூச் பெகர் இராச்சியம் 1949-ஆம் ஆண்டில் மேற்கு வங்காள மாநிலத்துடன் இணக்கப்பட்டது. இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia