நரசிங்கர் சமஸ்தானம்
![]() ![]() நரசிங்கர் சமஸ்தானம் (Narsinghgarh State)[1] இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் நரசிங்கர் நகரம் ஆகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்கர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் மத்திய இந்திய முகமையின் கீழ் இருந்த போபால் முகமையில் நரசிங்கர் சமஸ்தானம் செயல்பட்டது. 1901-ஆம் ஆண்டில் நரசிங்கர் சமஸ்தானம் 1,920 சதுர கிலோமீட்டர்கள் (740 sq mi) பரப்பளவும், ஆண்டு வருவாய் ரூபாய் 5,00,000 கொண்டிருந்தது.[2][3]இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948-ஆம் ஆண்டில் நரசிங்கர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. வரலாறுஇராஜபுத்திர குலத்தின் பார்மர் வம்சத்தின் போஜன் என்பவர் நரசிங்கர் இராச்சியத்தை 1681-ஆம் ஆண்டில் நிறுவினார். இது முன்னர் ராஜ்கர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் முன்னர் வரை நரசிங்கர் இராச்சியம், இந்தூர் இராச்சியத்தின் சிற்றரசாக விளங்கியது. 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற நரசிங்கர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் மத்திய இந்திய முகமையின் கீழ் இருந்த [[போபால் முகமையில் இருந்தது. 1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி நரசிங்கர் சமஸ்தானம் மத்திய பாரதம் மாநிலத்துடன் (1948–1956) இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, நரசிங்கர் சமஸ்தானம் மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. ஆட்சியாளர்கள்நரசிங்கர் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். [4]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia