காம்பே சமஸ்தானம்
![]() ![]() காம்பே சமஸ்தானம் (Cambay State, Kambay or Khambhat), 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் காம்பத் நகரம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் காம்பே வளைகுடாவில் அமைந்த ஆனந்த் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காம்பே இராச்சியம் 906 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 75,122 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் . வரலாறுமுகலாயப் பேரரசின் இறுதிக் காலத்தில் 1730-ஆம் ஆண்டில் முதலாம் மிர்சா ஜாபர் மூமின் கான் காம்பே இராச்சியத்தை நிறுவினார். பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது காம்பே இராச்சியம். 1802 பசீன் உடன்படிக்கையின் படி மராத்தியப் பேரரசினர் காம்பே சமஸ்தானப் பகுதிகளை பிரித்தானிய இந்தியாவிற்கு விட்டு கொடுத்தனர். பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற காம்பே இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். காம்பே சமஸ்தானம் பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில் இருந்த பரோடா மற்றும் குஜராத் முகமையின் கீழ் செயல்பட்டது. காம்பே இராச்சிய நவாப்புகளுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 1948-ஆம் ஆண்டில் காம்பே சமஸ்தானம் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.[1] 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, காம்பே சமஸ்தானம் குஜராத் மாநிலத்தின் ஆனந்து மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia