ரேவா சமஸ்தானம்
![]() ![]() ![]() ரேவா இராச்சியம் (Rewa State) , இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த பகேல்கண்ட் பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் ரேவா நகரம் ஆகும்.[2] 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ரேவா இராச்சியம் 33,670 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 13,27,385 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. [3] ரேவா இராச்சிய ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 17 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். [4] வரலாறுமராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ரேவா இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற ரேவா இராச்சியத்தினர், 1812-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.[5] இது பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையின் கீழ் செயல்பட்டது. ரேவா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 17 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் இந்தூர் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி ரேவா இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் விந்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ரேவா இராச்சியப் பகுதிகளை மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. ரேவா ஆட்சியாளர்கள்ரேவா ஆட்சியாளர்களை மகாராஜா எனும் பட்டத்துடன் அழைக்கப்பட்டனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia