நாபா சமஸ்தானம்
![]() நாபா சமஸ்தானம் (Nabha State),[1]1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதனை தலைநகரம் நாபா நகரம் ஆகும். 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்த இராச்சியம் 2502 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 2,97,949 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் . வரலாறு17-ஆம் நூற்றாண்டில் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த நாபா இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற நாபா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியத்தின் கீழ் இருந்தது. நாபா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி நாபா சமஸ்தானம் 1947-1956 வரை பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியத்தில் இருந்தது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, நாபா இராச்சியப் பகுதிகள் பஞ்சாப் மாநிலத்தில் இணைக்கப்பட்டது. இதனையும் காண்க
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia